Wednesday, October 29, 2008

அரசாங்க சேவை புரியும் அமைப்பு

ஒருவர் அரசாங்க சேவை புரியும் வைப்பு அமைய ஜாதகத்தில் சூரியன் , செவ்வாய் போன்ற கிரகங்கள் வலுத்து இருக்க வேண்டும். செவ்வாய் அல்லது சூரியன் ஆட்சி உச்சம் பெற்று இருப்பது , லக்னத்திற்கு 3,6,9,10,11 போன்ற இடங்களில் அமைய பெற்று இருப்பது அரசாங்க சேவை புரிய வாய்ப்பு ஏற்படுத்தி தரும் .

Monday, October 27, 2008

மீன ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆதி சேஷன் சித்திரகுப்தர் - காஞ்சிபுரம்

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி, தக்ஷினாமூர்த்தி - திருவையாறு

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர் - ஓமாம்புலியூர்

நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்றால் வாழ்வில் ஒரு முறையாவது மேற்கண்ட கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும்.

இன்னும் வரும் - தகவல் உதவி (http://www.pariharam.com/)

கும்ப ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி , நாகராஜா - கொடுமுடி , கரூர்

சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி , நாகராஜா - திருச்செங்கோடு

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆதி சேஷன் , சித்திரகுப்தர் - காஞ்சிபுரம்

நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்றால் வாழ்வில் ஒரு முறையாவது மேற்கண்ட கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும்.

இன்னும் வரும் - தகவல் உதவி (http://www.pariharam.com/)

Wednesday, October 22, 2008

மகர ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : தென்முக கடவுள், துர்காதேவி -தர்மபுரம்

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ராஜகாளி அம்மன் , தேதுபட்டி

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி , நாகராஜா - கொடுமுடி , கரூர்


நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்றால் வாழ்வில் ஒரு முறையாவது மேற்கண்ட கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும்.

இன்னும் வரும் - தகவல் உதவி (http://www.pariharam.com/)

Tuesday, October 21, 2008

தனுசு ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : தென்முக கடவுள் , துர்காதேவி -தர்மபுரம்

மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாவலூர் தென்முக கடவுள்

பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாவலூர் தென்முக கடவுள்

நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்றால் வாழ்வில் ஒரு முறையாவது மேற்கண்ட கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும்.

இன்னும் வரும் - தகவல் உதவி (http://www.pariharam.com/)

Friday, October 17, 2008

விருச்சிக ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்

விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சோழவந்தான் சனீஸ்வரர்

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவிடை மருதூர் மூகாம்பிகை

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : பல்லடம் அங்காள பரமேஷ்வரி

நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்றால் வாழ்வில் ஒரு முறையாவது மேற்கண்ட கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும்.

இன்னும் வரும் - தகவல் உதவி (http://www.pariharam.com/)

Thursday, October 2, 2008

துலா ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாரூர் ராஜதுர்கை

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவானைக்காவல் சனீஸ்வரர்

விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சோழவந்தான் சனீஸ்வரர்


நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்றால் வாழ்வில் ஒரு முறையாவது மேற்கண்ட கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும்.

இன்னும் வரும் - தகவல் உதவி (http://www.pariharam.com/)

Monday, September 22, 2008

கன்னி ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்

உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : மூவனுர் வாஞ்சியாம்மன்

ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாரூர் ராஜதுர்கை

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாரூர் ராஜதுர்கை


நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்றால் வாழ்வில் ஒரு முறையாவது மேற்கண்ட கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும்.

இன்னும் வரும் - தகவல் உதவி (http://www.pariharam.com/)

Tuesday, September 16, 2008

சிம்ம ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்

மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சிதம்பரம் தில்லைகாளி

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருமணஞ்சேரி ராகு பகவான்

உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : மூவனுர் வாஞ்சியாம்மன்

நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்றால் வாழ்வில் ஒரு முறையாவது மேற்கண்ட கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும்.

இன்னும் வரும் - தகவல் உதவி (http://www.pariharam.com/)

Monday, September 8, 2008

கடக ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆலங்குடி குருபகவான்

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனிஸ்வரர் குச்சனூர் மதுரை

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனிஸ்வரர் ,திருபரங்குன்றம்

நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்றால் வாழ்வில் ஒரு முறையாவது மேற்கண்ட கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும்.

இன்னும் வரும் - தகவல் உதவி (http://www.pariharam.com/)


Thursday, August 21, 2008

மிதுன ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்

மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : துர்க்கா தேவி ,கதிராமங்கலம்

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர் திருகொன்னிக்காடு

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆலங்குடி குருபகவான்

நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்றால் வாழ்வில் ஒரு முறையாவது மேற்கண்ட கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும்.

இன்னும் வரும் - தகவல் உதவி (http://www.pariharam.com/)


Friday, August 15, 2008

ரிஷப ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்

ரிஷப ராசி :
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாகை ஆதி சேஷன் கோவில்

ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : நாக நாத சுவாமி ,திருநாகேச்வரம்

மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : துர்க்கா தேவி ,கதிராமங்கலம்

நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்றால் வாழ்வில் ஒரு முறையாவது மேற்கண்ட கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும்.

இன்னும் வரும் - தகவல் உதவி (http://www.pariharam.com/)

Tuesday, August 12, 2008

மேஷ ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்

மேஷ ராசி :
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநள்ளாறு சனிஸ்வரர் கோவில்
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாலங்காடு மகா காளி கோவில்
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாகை ஆதி சேஷன் கோவில்
நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்றால் வாழ்வில் ஒரு முறையாவது மேற்கண்ட கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும்.

இன்னும் வரும் - தகவல் உதவி (http://www.pariharam.com)

Friday, July 18, 2008

சனி பெயர்ச்சியும் அஷ்ட வர்க்க பரல்களும்

அஷ்ட வர்க்க பரல்கள் கணித்து பார்ப்பதிலே ஒரு நன்மை உண்டு. பொதுவாக சந்திரா லக்கினத்திற்கு 3,6,11 ஆகிய வீடுகளில் சனி உலவும்போது நன்மைகள் செய்வர். அதே நேரத்தில் ஒருவருடைய தனிப்பட்ட ஜாதகத்தில் கூடுதலான பரல்களை இந்த இடங்கள் பெற்று இருந்தால் மிகவும் விசேஷமான நன்மைகள் செய்யும். அதே போல் தீமைகள் உண்டாக்கும் ஏழரை சனி அஷ்டம சனி காலங்களில் அந்த இடங்கள் பரல்கள் அதிகம் பெற்றால் அதிக தீமைகளை செய்யாது.

Thursday, July 17, 2008

அஷ்டவர்க்கம்

ஒரு வீட்டின் தனிப்பட்ட பரல் சராசரியாக 28 இருக்கவேண்டும். 30 க்கு மேல் இருந்தால் அந்த வீட்டின் பலம் நன்றாக உள்ளது என்று அர்த்தம் கொள்ளவேண்டும். 28 கும் குறைவாக இருந்தால் பலம் குறைவாக உள்ளது என்று அர்த்தம் கொள்ளவேண்டும் .


ஒரு கிரகத்தின் தனிப்பட்ட பரல் சராசரியாக 4 இருக்கவேண்டும். 8 க்கு மேல் இருந்தால் அந்த குறிப்பிட்ட கிரகத்தின் பலம் நன்றாக உள்ளது என்று அர்த்தம் கொள்ளவேண்டும். 4 கும் குறைவாக இருந்தால் பலம் குறைவாக உள்ளது என்று அர்த்தம் கொள்ளவேண்டும் .

Wednesday, July 16, 2008

அரசியலில் ஈடுபட்டு பெரும் வெற்றிகள் அடைய

அரசியலில் ஈடுபட்டு பெரும் வெற்றிகள் அடைய வேண்டுமென்றால் பின்வரும் அமைப்புகள் இருப்பது நல்லது.

  • சூரியன் மற்றும் செவ்வாய் கிரகங்கள் கண்டிப்பாக பலம் பெற்று இருக்கவேண்டும்.
  • பரிவர்த்தனை யோகம் அல்லது குரு சந்திர யோகம் அல்லது கஜகேசரி யோகம் அல்லது தர்ம கர்மாதிபதி யோகம் அல்லது பஞ்ச மகா புருஷ யோகம் அல்லது நரேந்திர ராஜ யோகம் போன்ற யோகங்களில் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட யோகங்களை பெற்று விளங்க வேண்டும்.
  • செவ்வாய் உச்சம் பெற்றோ அல்லது 3,6,11 போன்ற இடங்களிலோ இருக்க வேண்டும்.
  • 1,5,10 போன்ற இடங்கள் பலம் பெற்று இருந்தாலும் அரசியல் யோகங்கள் உண்டு.
  • மூன்றாம் இடமாகிய தைரிய மற்றும் பராக்கிரம இடம் வலுத்து காணப்பட வேண்டும்.
  • 6 மிடத்தில் சனி ,ராகு ,செவ்வாய் போன்ற கிரகங்கள் வலுத்து காணப்பட்டால் எதிரிகள் வெல்ல முடியாத நிலை உண்டாகும்.

Tuesday, July 15, 2008

பரல்கள்.....

பரல்கள் என்றால் நம் ஜாதகத்தின் கட்டத்தில் அமைத்து உள்ள ஒவ்வொரு கிரகத்தின் தனிப்பட்ட வலிமையும் மற்றும் ஜாதகத்தின் 1 ஆம் வீடு முதல் 12 ஆம் வீடு வரை ஒவ்வொரு வீடும் பெற்றுள்ள வலிமை பார்க்கும் ஒரு முறை தன் பரல்கள் .இதை அஷ்டவர்க்க அட்டவனையை பார்த்து தெரிந்து கொள்ளலாம் .

Monday, July 14, 2008

புத்திரர்கள் உண்டாகுதலும் குரு கிரகமும்

குரு கிரகம் ஐந்தாம் இடமாகிய புத்திர ஸ்தானத்தில் இருந்தால் புத்திரர்கள் உண்டாக தடைகளை உண்டு பண்ணும் .ஆனால் மீனா லக்கினத்திற்கு மட்டும் ஐந்தாம் இடத்தில் குரு உச்சமாக இருந்தால் இந்த தடை வெகு காலத்திற்கு நீடிக்காது. ஆனாலும் ஆண் பிள்ளைகள் உண்டாவதிர்க்கு பதிலாக பெண் பிள்ளைகளே அதிகம் உண்டாக்கும்.

புத்திரஸ்தானம்

ஒரு ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 5 வது இடத்தை புத்திரஸ்தானம் என்று கூறுவர் . பொதுவாக இந்த இடத்தில் எந்த கிரகம் இருந்தாலும் அவரவர் ஜெனன ஜாதகத்தின் கிரக நிலைகள் பொறுத்து , அதன் திசை அல்லது புத்தி வரும் கால நேரம் பொறுத்து தோஷத்தை ஏற்படுத்தும் .இந்த 5 ஆம் இடத்தில் சூரியன் இருந்தால் தந்தைக்கு தோஷத்தையும் , சந்திரன் இருந்தால் தாய்க்கு தோஷத்தையும் , சனி இருந்தால் தனது குழந்தைகளுக்கும் , புதனிருந்தால் தாய் வர்கத்தினருக்கும் , குருவிருந்தால் தந்தை வர்கத்தினருக்கும் , ராகு இருந்தால் பிள்ளைகளுக்கும் , செவ்வாய் இருந்தால் தாய்மாமனுக்கும் தோஷம் உண்டாகும் .

Friday, July 11, 2008

ராகு மற்றும் கேது திசை பலன்கள்

ராகு திசை : மீனம் மற்றும் கடகம் இந்த லக்கினங்களில் பிறந்தவர்களுக்கு ராகு மகா திசை வந்தால் நல்ல பாக்கியங்களை தருவார் .பொன் பொருள் சேர்த்தல் மற்றும் சுப காரியங்கள் நடத்தல் போன்ற நற்பலன்களை அளிப்பார்.

கேது திசை : மகரம் மற்றும் கன்னி இந்த லக்கினங்களில் பிறந்தவர்களுக்கு கேது மகா திசை வந்தால் மிகுந்த செல்வம் மற்றும் ராஜ சன்மானங்கள் பெற்று வாழும் சிறப்பான அமைப்பை தருவார்.

Wednesday, July 9, 2008

ஆயுள் ஸ்தானம் மற்றும் மாரகம்

ஒரு ஜாதகத்தில் 8 ஆம் இடத்தை கொண்டு ஆயுளை பற்றியும் 2 , 7 ஆம் இடத்தை கொண்டு மாரகத்தை பற்றியும் கூறமுடியும் .மாரக தசை அல்லது புத்தி வரும் காலங்களில் மிக கவனமுடன் இருப்பது அவசியம் .

Tuesday, July 8, 2008

நரேந்திர ராஜயோகம் .....

ஒரு ஜாதகத்தில் லக்னத்திலிருந்து அல்லது ராசியிலிருந்து 1 , 5 , 9 ,10 குரு , சுக்கிரன் , தனித்து நின்ற புதன் , இவர்கள் இருந்தால் நரேந்திர ராஜயோகமாகும். இந்த யோகம் அமைந்தவருக்கு வாழ்வில் நல்ல பல நன்மைகள் கிடைக்கும் .

Monday, July 7, 2008

சுபக்கிரகம் ...

குரு , சுக்கிரன் , வளர்பிறை சந்திரன் , நல்ல சேர்க்கையுடன் கூடிய புதன் இவர்கள் சுபக்கிரகங்கள் ஆவார் . சூரியன் , செவ்வாய் , சனி , ராகு , கேது , தேய்பிறை சந்திரன் கெட்ட சேர்க்கையுடன் கூடிய புதன் இவர்கள் பாபகிரகங்கள். இது பொதுவான விதி. ஆனால் எந்த ஒரு பாபகிரகம் ஒரு குறிபிட்ட லக்னத்திற்கு ஆதிபத்தியம் மூலம் 5 மற்றும் 9 வீடுகளுக்கு அதிபதியானால் அவர்கள் சுபக்கிரகங்கள் போல் நன்மை செய்கின்றன.

Sunday, July 6, 2008

வணக்கம் வாசகர்களே...

வணக்கம் வாசகர்களே

கடந்த ஐந்து நாட்களாக தவிர்க்க முடியாத வெளியூர் பயணம் சென்றுவிட்ட காரணத்தினால் இந்த வலைப்பூவில் புதிய குறிப்புகளை என்னால் எழுத முடியவில்லை.மன்னிக்கவும்.இன்று முதல் மறுபடியும் எழுதத் திட்டமிட்டுள்ளேன்.நீங்கள் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கு மிக்க நன்றி.

அன்புடன்,
விஜயபானு ரகுபதி.

Monday, June 30, 2008

சேமிப்பு யாருக்கு? பற்றாகுறை யாருக்கு ?

ஒரு ஜாதகத்தில் 12 ஆம் வீட்டை விட 11 ஆம் வீடு பலம் உடையதாக இருந்தால் செலவை விட சேமிப்பு அதிகமாக இருக்கும். அஷ்டவர்க்கம் கணிதப்படி12 ஆம் வீட்டை விட 11 ஆம் வீட்டில் பரல்கள் அதிகம் இருந்தால் மட்டுமே ஒருவரால் பணம் சேமிக்க இயலும் .இதற்க்கு மாறாக 12 ஆம் வீடு அதிக பரல்கள் பெற்று விட்டால் செலவுகளே அதிகப்படும்.

Friday, June 27, 2008

எப்படிப்பட்ட கணவர் அமைவார்

ஒரு பெண்ணுடைய ஜாதகத்தில் 7 மிடத்தில் சுக்ரன் இருந்தாலோ அல்லது சம்பந்தம் பெற்று இருந்தாலோ அழகும் , அதிர்ஷ்டமும் உடைய கணவர் அமைவார்.

செவ்வாய் இருந்தாலோ அல்லது சம்பந்தம் பெற்று இருந்தாலோ
முன்கோபம் கொண்ட கணவராகவும் மற்றும் தைர்யம் மிகுந்தவராகவும் இருப்பார்.

புதன் இருந்தாலோ அல்லது சம்பந்தம் பெற்று இருந்தாலோ
படித்த மற்றும் புத்திசாலித்தனம் மிகுந்த கணவராக இருப்பார்.

குரு இருந்தாலோ அல்லது சம்பந்தம் பெற்று இருந்தாலோ
நல்ல பண்புகள் உடைய மற்றும் நீதி நெறிப்படி செயல்படுவராகவும் இருப்பார்.

சனி இருந்தாலோ அல்லது சம்பந்தம் பெற்று இருந்தாலோ
வயது அதிகம் உடையவராகவும் மற்றும் கோபம் அதிகம் உடையவராகவும் இருப்பார்.

Thursday, June 26, 2008

லக்னாதிபதி மற்றும் சூரியன் ....

ஒருவருடைய ஜாதகத்தில் லக்னாதிபதி என்று சொல்ல கூடிய ஒன்றாம் வீட்டின் அதிபதியும் ஆத்மக்காரன் என்று சொல்லக்கூடிய சூரியனும் நன்கு அமைய வேண்டும்.அதாவது ஆட்சி , உச்சம் , கேந்திர மற்றும் திரிகோண ஸ்தானங்களில் அமர வேண்டும் . மறைவு ஸ்தானங்களில் அமரக்கூடாது .அவ்வாறு நன்கு அமைந்து இருப்பின் ஜாதகர் எத்தகைய துன்பங்களையும் , கஷ்ட நஷ்டங்களையும் கடந்து வெற்றி கொள்வார் .

Wednesday, June 25, 2008

வாகன யோகம்

ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் மற்றும் நான்காம் வீட்டை கொண்டு வாகன யோகம் இருக்கிறதா என்று சொல்ல முடியும்.நான்காம் வீடு பலம் பொருந்தி இருக்கவேண்டும் .அதாவது ஆட்சி உச்சம் கேந்திர ( 1 , 4 , 7 , 10 ) அல்லது திரிகோணம் ( 5 , 7 , 9 ) இருக்கவேண்டும் .இந்த பலத்தை வைத்து தான் அவர் விலை உயர்ந்த வாகனத்தில் செல்வாரா என்று சொல்ல முடியும்.

Tuesday, June 24, 2008

அர்த்தாஷ்டம சனி ...

ஒருவரது ஜென்ம ராசியில் இருந்து கோட்சார ரீதியாக 4 ஆம் இடத்தில் சனி பகவான் வரும் காலத்தை அர்த்தாஷ்டம சனி என்கிறோம்.ஜென்ம ராசிக்கு நான்காம் வீட்டில் சஞ்சரிக்கும் காலத்தில் குடும்பத்தில் பல்வேறு சிக்கல்களை அடைவார் .உறவினர் மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்படும் .தொழில் அல்லது வியாபார துறையில் இழுபறி நிலை நீடிக்கும் .ஜாதகர் சுகக்கேட்டை அடைவார். குடும்ப சுமைகள் கூடும் . சுருக்கமாக கூறுவதென்றால் அஷ்டம சனி நடப்பதை போன்று தோன்றும் . ரிஷப ராசிக்காரர்களுக்கு தற்பொழுது அர்த்தாஷ்டம சனி நடப்பில் உள்ளது .

Monday, June 23, 2008

அஷ்டமத்து சனி ...........

ஒருவரது ஜென்ம ராசிக்கு கோட்சார ரீதியாக 8 ஆம் வீட்டில் சனி வரும் காலமே அஷ்டமத்து சனி எனப்படும் .இக்காலத்தில் ஒருவர் பல்வேறு தடங்கல்களையும் இடையுறுகளையும் சந்திக்க கூடும் .முயற்சிகள் எளிதில் வெற்றி அளிக்காது .உடல் நலம் பாதிப்படையும் . பொருள் இழப்புகள் ஏற்படும் . கெட்ட தசா புக்திகள் நடப்பில் இருந்தால் கஷ்ட நஷ்டங்கள் ஏற்படும் .

தற்பொழுது மகர ராசிக்காரர்களுக்கு அஷ்டமத்து சனி நடப்பில் உள்ளது.

Sunday, June 22, 2008

யாருக்கு ஏழரை சனி

கன்னி ராசிக்கு 12 இல் விரைய சனியும் , சிம்ம ராசிக்கு ஜென்ம சனியாகவும் , கடக ராசிக்கு 2 இல் குடும்ப சனியாக உலவிகொண்டிருகிறது .

Saturday, June 21, 2008

ஏழரை சனி

நமது ராசியில் இருந்து 12 , 1 , 2 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் காலத்தை தான் ஏழரை சனி என்கிறோம் . இந்த ஏழரை ஆண்டுகள் எல்லோருமே சிற்சில சங்கடங்களை அடைவதை கண்கூடாகக் காண்கின்றோம் . உண்மையில் ஏழரை சனி நடை பெரும் காலத்தில் ஒருவரது வாழ்கைப் பாதையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழும் .

ஒருவரது ஜென்ம ராசிக்கு 12 சஞ்சரிக்கும் 2 1/2 ஆண்டு காலமும் துன்பங்கள் தொடர்வதை போன்ற உணர்வு ஏற்பட்டுவிடும் .பொருள் விரயமாவது , தொழில் வழியில் முடக்கம் , அல்லது புதிய தொழில் முதலீடு செய்ய வேண்டிய கட்டாயம் . போட்ட முதலுக்கேற்ப வருமானம் இருக்காது . இட மாற்றங்கள் , குடும்ப உறுபினர்களை பிரித்து வாழ்வது . வீடு கட்டுதல் , திருமணம் போன்ற சுபகாரியம் செய்தல் .பெரும்பாலும் வீண் அலைச்சல் , கஷ்ட நஷ்டம் , உடல் உழைப்பு மிகுந்து காணப்படும்.

ஒருவரது ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் 2 1/2 ஆண்டுகள் வீண் வம்பு - வழக்கு விவகாரம் தோன்றும் .சிறு விபத்துகள் நேரும் . எக்காரியமும் நினைத்தபடி நடக்காது. முக பொலிவு குறைந்து காணப்படும் . செய்தொழில் முடக்கம் ஏற்படும் . எதிலும் எப்போதும் ஏதேனும் கவலை இருந்து வரும் . மன உளைச்சல் ஏற்படும் .

ஒருவரது ஜென்ம ராசிக்கு 2 சஞ்சரிக்கும் 2 1/2 ஆண்டு காலம் குடும்ப கவலை அடைவர் . பணம் கிடைத்தாலும் தங்காது . எவ்வளவு வரவு ஏற்பட்டாலும் செலவுகள் ஏற்பட்டு கரைந்துவிடும் . வீண் பயம் குடிகொள்ளும் . முன்னுக்குப் பின் முரணாக பேசுவர் , கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும்.

Friday, June 20, 2008

சனி பெயர்ச்சி - ஏழரை சனி

கிரகங்களில் சனி கிரகம் மட்டுமே ஒரு ராசியில் 2 1/2 வருடம் இருக்கும்.இதனால் ஒரு ராசி சக்ரத்தை சுற்றி வர 30 வருடம் ஆகும்.பொதுவாக கோட்சாரத்தில் அதாவது ராசியில் இருந்து சனி 3 , 6 , 11 இடங்களுக்கு வரும் பொது நல்ல பலன்கள் தரும்.கோட்சாரத்தில் 12 , 1 , 2 வரும் காலத்தை தான் ஏழரை சனி என்கிறோம் .இந்த 7 1/2 வருடங்களில் சனி ஒரு மனிதனின் வாழ்வில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் .குடும்பம் என்றால் என்ன ? மனைவி என்றால் என்ன? குழந்தைகள் என்றால் என்ன ? என்ற வாழ்க்கை தத்துவத்தை நன்கு புரிந்து கொள்கிறான் . பணத்தின் அருமையும் மற்றவர்களோடு எப்படி பழக வேண்டும் என்ற உண்மையும் புரிய வைத்து அவனது வாழ்கையை சனி பகவான் செம்மைப்படுத்துகிறார் . இந்த அனுபவங்களை பயன்படுத்தி வாழ்கையில் வெற்றி பெற உதவுகிறார் . எனவே ஏழரை சனி நடை பெற்றால் நாம் வருத்தபடவேன்டியது இல்லை .

Thursday, June 19, 2008

குரு பெயர்ச்சி ..

குரு கிரகம் ஒரு ராசியை கடக்க சுமார் ஒரு வருடம் ஆகும் . இப்படி அவர் 12 ராசிகளையும் கடக்க 12 வருடம் எடுப்பார். ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு செல்வதை தான் குரு பெயர்ச்சி என்கிறோம் .ஜெனன ஜாதகத்தில் சந்திரனில் இருந்து தான் குரு பெயர்ச்சியை கணிக்கிறோம்.பொதுவாக கோட்சாரத்தில் குரு 5 , 7 , 9 , 11 ஆகிய இடங்களுக்கு செல்லும் பொது திருமணம் போன்ற சுபகாரியங்கள் , வேலை வாய்ப்பு , செல்வம் , குழந்தை பாக்கியம் போன்றவற்றை தருகிறார். தற்சமயம் தனுசு ராசியில் இருக்கும் குரு வருகிற டிசம்பர் 6 . 2008 அன்று மகர ராசிக்கு செல்கிறார் .

Monday, June 16, 2008

யோககாரகன் என்றால் என்ன ?

ஒரு லக்னதிற்கு கேந்திர மற்றும் திரிகோணத்திற்கு ஆதிபத்தியம் பெரும் கிரகம் யோகத்தை செய்யும் .சனி , சுக்கிரன் , செவ்வாய் போன்ற கிரகங்கள் இந்த பட்டியலில் அடங்கும் .மேலும் 9 மற்றும் 10 இடங்களுக்கு அதிபதியும் யோகத்தை செய்வார்கள் .

Sunday, June 15, 2008

களத்திர தோஷம் ..

லக்னதிற்கு 7 வது இடம் களத்திர ஸ்தானம் எனப்படும். இவ்வாறு 7 ஆம் இடத்தில் சூரியன் , செவ்வாய் , சனி , சுக்கிரன் , ராகு , கேது இருந்தாலும் 7 ஆம் அதிபதி பலம் குன்றி இருந்தாலும் களத்திர தோஷமாகும்.இதற்கு தகுந்த பரிகாரம் செய்வதால் திருமண தாமதம் மற்றும் இந்த கிரகங்கள் செய்ய கூடிய தீய பலனை குறைய செய்யும் .

Saturday, June 14, 2008

கிரகங்களின் காரகத்துவம்....

சூரியன் - ஆத்மகாரகன் ; தந்தைகாரகன்

சந்திரன் - மாத்ருகாரகன்

செவ்வாய் - சகோதரகாரகன்

குரு - புத்திரகாரகன்

சுக்கிரன் - களத்திரகாரகன்

புதன் - மாமன்காரகன் ;கல்விகாரகன்

சனி - ஆயுள்காரகன்

ராகு , கேது - காரகத்துவம் கிடையாது .

ஒரு கிரகம் ஆட்சி உச்சம் பெற்று இருந்தாலோ அல்லது கேந்திர , திரிகோண ஸ்தானங்களில் சுப பலத்துடன் இருந்தாலோ அந்த கிரகத்தின் காரகத்துவ பலன்களை நல்ல வலிமையுடன் செயல் படுத்தும் . உதாரணமாக

- செவ்வாய் இது போன்று இருந்தால் சகோதரனுக்கு நன்மை செய்யும் .
- சூரியன் இது போன்று இருந்தால் தந்தைக்கு நன்மை செய்யும் .

இதற்கு மாறாக ஒரு கிரகம் நீசம் பெற்றோ அல்லது அசுப பலன் பெற்று இருந்தால் நன்மைக்கு பதிலாக தீமையே செய்யும் .

Thursday, June 12, 2008

மாங்கல்ய தோஷம்

லக்னத்துக்கு 8 மிடம் மாங்கல்ய ஸ்தானம் ஆகும் .இதில் கிரகங்கள் இல்லாமல் இருப்பது மிகவும் நல்லதாகும் ...சுப கிரகங்கள் இடம் பெற்றாலும் கூட குறைந்த அளவில் தோஷத்தை ஏற்படுத்தும் .ஆனால் பாவ கிரகங்கள் இடம் பெற்றால் மாங்கல்ய தோஷம் உண்டாகும் .இதனால் திருமணம் தாமதமாகும் மற்றும் திருமணம் நடந்த பிறகு பாதிப்பு உண்டாக்கும் .தகுந்த பரிகாரம் மற்றும் கோவில் வழிபாடுகள் செய்து கொள்வது மிகவும் நல்லது .

Saturday, June 7, 2008

புத்திர தோஷம்

5 ல் ராகு ,கேது போன்ற பாவ கிரகங்கள் அல்லது குரு கிரகமோ இருந்து 3 க்கு உடையவர் ஜாதகத்தில் பலம் இல்லாத நிலையில் இருந்து ,9 மிட பாக்கியதிபதியும் வலுவிழந்து காணப்பட்டால்,புத்திர தோஷம் கண்டிப்பாக உண்டாகும்.

Friday, June 6, 2008

யோகம் கெட்ட ஜாதகம்

ஒரு ஜாதகத்தில் 9 க்கு உடைய கிரகம் 8 ல் இடம் பெற்றாலோ அல்லது 10 க்கு உடைய கிரகம் 11 ல் இடம் பெற்றாலோ அந்த ஜாதகத்தில் உள்ள யோகம் கெட்டு விடும் . குரு பார்வை அந்த இடத்திற்கு கிடைத்தால் ஓரளவு யோக பலன்கள் உண்டாகும்.

Thursday, June 5, 2008

பாதகமான தாக்கத்தை உருவாக்கும் பாதகாதிபதி

பாதகாதிபதி பலம் வாய்ந்த எந்த பாவங்களில் இருக்கிறாரோ அந்த பாவங்களில் உருவாகும் பலன்களில் பாதகத்தை செய்வர் .மேலும் பாதகாதிபதி எந்த இடத்தை பார்க்கிறாரோ அந்த இடத்தின் பலன்களும் பாதிக்கப்படும் .

மேஷம் , கடகம் , துலாம் , மகரம் ஆகிய லக்னங்களுக்கு - 11 ஆம் வீடு மற்றும் அதன் அதிபதி பாதகாதிபதி ஆகும்.

ரிஷபம் , சிம்மம் , விருச்சிகம் , கும்பம் ஆகிய லக்னங்களுக்கு - 9 ஆம் வீடு மற்றும் அதன் அதிபதி பாதகாதிபதி ஆகும்.

மிதுனம் , கன்னி , தனுசு , மீனம் ஆகிய லக்னங்களுக்கு - 7 ஆம் வீடு மற்றும் அதன் அதிபதி பாதகாதிபதி ஆகும்.

Wednesday, June 4, 2008

பலன் அளிக்க கூடிய பரிகார ஸ்தலங்கள் ....

சூரியன் - சூரியனார் கோவில் .

சந்திரன் - திருப்பதி .

குரு - ஆலங்குடி , திருச்செந்தூர் .

சுக்கிரன் - ஸ்ரீ ரங்கம் .

புதன் - திருவெண்காடு , மதுரை மீனாட்சி அம்மன் கோவில் .

செவ்வாய் - வைத்திஸ்வரன் கோவில் .

சனி - திருநள்ளாறு .

ராகு - திருநாகேஷ்வரம் .

கேது - காளாஸ்திரி . ( ஆந்திரப் பிரதேசம் )

திருமணம் செய்து கொள்ள .....

குரு பகவான் ஜென்ம ராசிக்கு 2 , 5 , 7 , 9 , 11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் பொழுது திருமணம் நடைபெறும் .ஆணின் அல்லது பெண்ணின் ஜாதகத்தில் 7 ஆம் வீட்டிற்கு அதிபதி , 7 இல் இருக்கும் கிரகம் , 7 ஆம் வீட்டை பார்க்கும் கிரகம் - இதன் திசா புக்தி காலங்களில் குரு பலம் அமையும் பொழுது திருமணம் நடைபெறும் .

Tuesday, June 3, 2008

ஆயுள் காக்கும் சனியின் பலம் ....

லக்னத்திற்கோ அல்லது சந்திரனுக்கோ சனி பகை படாமல் நீசம் அடையாமல் இருந்தால் ஜாதகருக்கு ஆயுள் பலம் உண்டு .8 ஆம் இடத்தை சனி பார்த்தாலும் ,இருந்தாலும் 8 ஆம் இடம் சுத்தமாக இருந்தாலும் நீண்ட ஆயுள் உண்டு .

Monday, June 2, 2008

தன லாபம் உடையவர் .....

லக்னாதிபதி 1, 4 , 5 , 7 , 9 , 10 இந்த வீடுகளில் இருந்து 11 ஆம் இடத்தை பாபகிரகம் சேராது இருந்தாலும் அல்லது 2 க்குடையவன் 11 இல் 11 க்குடையவன் 2 இல் இருந்தாலும் அல்லது 2 , 11 க்குடையவர் கூடி 1 , 4 , 5 , 7 , 9 , 10 இல் இருந்தாலும் 11 க்குடையவன் இருக்கும் ராசிநாதன் சுபகிரகங்களுடன் சேர்ந்தோ அல்லது பார்த்தோ இருந்தாலும் அந்த ஜாதகன் தன லாபம் அடைவான் .

மாளிகையில் வசிக்கும் யோகம்...

லக்னாதிபதி லக்னத்தில் அல்லது 4 ஆம் வீட்டில் இருந்தாலும் 4 க்குடையவன் உச்ச வீட்டிலோ அல்லது ஆட்சி வீட்டிலோ சுபகிரகங்கள் பார்வை பெற்றால் மாளிகையில் வசிக்கும் யோகம் வரும்.

Sunday, June 1, 2008

ராகு திசை .....

ஜெனன காலத்தில் ராகு 3 , 6 , 11 இல் இடம் பெற்றோ அல்லது குரு பார்வை பெற்று ராகு திசை நடத்தினால் நல்ல யோக பலனை தரும் .

வியாபாரத்தில் சிறந்து விளங்கும் அமைப்பு ....

ஒருவரின் ஜாதகத்தில் புதனும் செவ்வாயும் 1 , 4 , 5 , 7 , 9 , 10 ஆகிய வீடுகளில் சுபபலத்துடன் காணப்பட்டால் அவர் வியாபாரத்தில் சிறந்து விளங்குவார்.

Saturday, May 31, 2008

எதிர்பாராத செல்வம் ...

9 க்குடையவர் ஆட்சி வீட்டிலும் , 4 இல் சுக்கிரனும் இருந்தால் ......சுபகிரகங்கள் கூடி 9 இல் இருந்தாலும் 9 க்குடையவர் தசா புத்திகளில் மிகுந்த எதிர்பாராத செல்வம் கிடைக்கும் .

சுயமுயற்சியால் தனம் வரும் அமைப்பு ....

லக்னாதிபதி அதிக பலம் பெற்று 1 , 4 , 7 , 10 இல் இருந்து சுபகிரகங்கள் பார்வை பெற்றால் தானாக தனாதிபதியாவான் .

Friday, May 30, 2008

வாசகர்களே

வணக்கம் வாசகர்களே

கடந்த மூன்று நாட்களாக தவிர்க்க முடியாத வெளியூர் பயணம் சென்றுவிட்ட காரணத்தினால் இந்த வலைப்பூவில் புதிய குறிப்புகளை என்னால் எழுத முடியவில்லை.மன்னிக்கவும்.இன்று முதல் மறுபடியும் எழுதத் திட்டமிட்டுள்ளேன்.நீங்கள் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கு மிக்க நன்றி.

அன்புடன்
விஜயபானு ரகுபதி

Tuesday, May 27, 2008

ராஜயோகங்கள்......தொடர்ச்சி......

பஞ்சமகா புருஷ யோகம் - பஞ்ச என்றால் 5 என்று பொருள் .5 யோகங்கள் அடங்கியது தான் பஞ்சமகா புருஷ யோகம்.அவை பின் வருமாறு......

ருச்சுக யோகம் - செவ்வாய் ஆட்சியோ அல்லது உச்சமோ பெற்று லக்னதிற்கோ அல்லது சந்திரனுகோ 1, 4, 7, 10 இல் இருப்பது .

ஹம்ச யோகம் - குரு பகவான் ஆட்சியோ அல்லது உச்சமோ பெற்று லக்னதிற்கோ அல்லது சந்திரனுகோ 1, 4, 7, 10 இல் இருப்பது .

பத்திர யோகம் - புதன் ஆட்சியோ அல்லது உச்சமோ பெற்று லக்னதிற்கோ அல்லது சந்திரனுகோ 1, 4, 7, 10 இல் இருப்பது .

மாளவியா யோகம் - சுக்கிரன் ஆட்சியோ அல்லது உச்சமோ பெற்று லக்னதிற்கோ அல்லது சந்திரனுகோ 1, 4, 7, 10 இல் இருப்பது .

சாஸ் யோகம் - சனி பகவான் ஆட்சியோ அல்லது உச்சமோ பெற்று லக்னதிற்கோ அல்லது சந்திரனுக் 1, 4, 7, 10 இல் இருப்பது .

Monday, May 26, 2008

ராஜயோகங்கள்......தொடர்ச்சி......

நீச்சபங்க ராஜயோகம் - ஒருவருடைய ஜாதகத்தில் எதாவது ஒரு கிரகம் நீச்சமடைந்து அந்த வீட்டிற்குரிய கிரகம் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தால் நீச்ச தன்மை பங்கம் பெற்று "நீச்சபங்க ராஜயோகம் " தருகிறது.................நீச்ச பெற்ற கிரகம் அம்சத்தில் ஆட்சி உச்சம் பெற்றாலும் "நீச்சபங்க ராஜயோகம் " தருகிறது.....................மேலும் ஒரு ஜாதகத்தில் எந்த கிரகம் நீசம் பெற்றிருக்கிறதோ , அந்த வீட்டிற்கு அதிபதி லக்னதிற்கு கேந்திரம் பெற்று அமைந்தாலும் "நீச்சபங்க ராஜயோகம் " தருகிறது.

ராஜயோகங்கள்......தொடர்ச்சி......

லக்ஷ்மி யோகம் - 9 ஆம் வீட்டிற்கு அதிபதி 10 இல் ஆட்சி பெற்றாலும் லக்னதிற்கு 4, 5, 7, 9, 10 இல் அமையபெற்றலும் லக்ஷ்மி யோகமாகும்.

கிரகமாலிகா யோகம் - ஒருவருடைய ஜாதகத்தில் லக்னதிற்கு முன்போ அல்லது பின்போ தொடர்ச்சியாக கிரகங்கள் இருந்தால் கிரகமாலிகா யோகமாகும்.

Sunday, May 25, 2008

ராஜயோகங்கள்......தொடர்ச்சி...

குரு சந்திர யோகம் - சந்திரனுக்கு 1 , 5 , 9 இல் குரு இருந்தால் குரு சந்திர யோகமாகும்.

சுனபா யோகம் - சந்திரன் எந்த வீட்டில் இருக்கிறாரோ , அந்த வீட்டிற்கு இரண்டாம் வீட்டில் சுக்கிரன் , குரு , புதன் போன்ற கிரகங்கள் இருந்தால் சுனபா யோகமாகும்.

அனபா யோகம் - சந்திரனுக்கு 12 ஆம் வீட்டில் சுக்கிரன் , குரு புதன் போன்ற கிரகங்கள் இருந்தால் அனபா யோகமாகும்.
சந்திரமங்கள யோகம் - சந்திரனுக்கு 1 , 4 , 7 , 10 இல் செவ்வாய் அமையபெற்றால் சந்திரமங்கள யோகமாகும்.

துஷ் யோகம் - 1 , 4 , 7 , 10 இல் கிரகங்கள் இருந்தால் சதுஷ்ர யோகமாகும்.

அமல யோகம் - சந்திரனுக்கு 10 இல் சுபகிரகம் இருந்தால் அமல யோகமாகும்.

சுபாவாசி யோகம் - சூரியனுக்கு 12 இல் சுபகிரகம் அமைந்தால் சுபாவாசி யோகமாகும்.

சுபவேசி யோகம் - சூரியனுக்கு 2 இல் சுபகிரகம் அமைந்தால் சுபவேசி யோகமாகும்.

Saturday, May 24, 2008

ராஜயோகங்கள்.......

1. தர்மகர்மாதிபதி யோகம் - ஒருவருடைய ஜாதகத்தில் 9 ஆம் அதிபதியும் 10 ஆம் அதிபதியும் ஒரே வீட்டில் இணைந்து காணப்படுவது தர்மகர்மாதிபதி யோகம்.

2. பரிவர்த்தனை யோகம் - எதாவது இரண்டு கிரகம் தத்தம் வீடுகளில் இருந்து மாறி இருக்கும் அமைப்பாகும்.உதாரணமாக : குரு வீட்டில் செவ்வாயும் செவ்வாய் வீட்டில் குருவும் பரிவர்த்தனையாகி காணப்படுவது பரிவர்த்தனை யோகம்.

3. கஜகேசரி யோகம் - ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் இருந்த வீட்டிற்கு 4,7,10 ஆம் வீட்டில் குரு இருந்தால் கஜகேசரி யோகம்.

Friday, May 23, 2008

வெளிநாடு செல்லும் வாய்ப்பு.........

ஜல ராசிகள் - கடகம் , விருச்சிகம் , மீனம்.

ஜல கிரகங்கள் - குரு , சந்திரன் , சுக்கிரன்.

ஜல ராசியில் ஜல கிரகங்கள் இருந்தாலும் , அந்த கிரகத்தின் தசையில் வெளிநாடு செல்வார்கள் .....மேலும் ராகு ஜல ராசியில் இருந்தாலும் வெளிநாடு செல்வார்கள் ......குரு ஜலராசிகளையும் ஜலராசிக்கு ஆதிபத்யமுள்ள கிரகங்களை பார்த்தாலும் அந்த ஜாதகர் கடல் கடந்து பிரயாணம் செய்யக் கூடிய யோகமுண்டு...ஜலராசிகளை லக்னமாக கொண்டவர்களும் வெளிநாடு செல்லும் யோகமுண்டு.

Thursday, May 22, 2008

சம்பாதிக்கும் திறன் உடையவர் ...

ஜென்ம லக்னத்திற்கு 3,6,10,11-இல் சூரியன் இருந்தால் ஜீவன யோகம் பெற்று சர்வ சாதரணமாக பணம் சம்பாதிக்கும் திறனை உடையவராக திகழ்வார் .

Wednesday, May 21, 2008

புத்திர தோஷம் அடிபடும் நிலை ....

லக்னாதிபதி 5 ஆம் இடத்தையோ அதன் அதிபதியையோ , 10 ஆம் இடத்தையோ அதன் அதிபதியையோ பார்த்தாலும் இணைத்தாலும் .......10 க்குடையவர் லக்கினம் மற்றும் லக்னாதிபதியின் இணைவு பார்வை பெற்று இருந்தாலும் .......கர்மகாரரான செவ்வாய் லக்னத்துடன் , 10 ஆம் இடத்துடன் தொடர்பு கொண்டால் ......புத்திர தோஷம் அடிபட்டு போவதுடன் கர்மம் செய்வதற்கு ஆண்பிள்ளை தோன்றும் வாய்ப்பு உண்டு .

Tuesday, May 20, 2008

தந்தை வழியில் திருமணம் ....

ஜாதகத்தில் 7 ஆம் இடத்தில் சூரியன் , ராகு , குரு , சுக்கிரன் ஆகியோர்கள் சம்பந்தம் ஏற்பட்டால் தந்தை வழி உறவில் திருமணம் நடக்கும்.

Monday, May 19, 2008

திருமணம் ...தனது ஜாதியிலா?...வேறு ஜாதியிலா?


வேறு
ஜாதியில் திருமணம்.

ஒருவரின் ஜாதகத்தில் ராகு , கேது , மாந்தி ஆகியோர் 7 ஆம் இடத்துடன் சம்பந்தபட்டால் அவருக்கு வேறு ஜாதியில் திருமணம் நடக்கும்.

தனது ஜாதியில் திருமணம் .

குரு , புதன் , சுக்கிரன் , வளர்பிறை சந்திரன் ஆகியோர் 7 ஆம் இடத்துடன் சம்பந்தபட்டால் அல்லது அவர்கள் சாரம் பெற்ற கிரகங்கள் 7 ஆம் இடத்துடன் சம்பந்தபட்டால் தனது ஜாதியில் திருமணம் நடக்கும்.

Saturday, May 17, 2008

கிரகங்களின் நட்பு வீடுகள் ....பகை வீடுகள்....


நட்பு
வீடுகள் .

சூரியன் - விருச்சிகம் , தனுசு , கடகம் , மீனம் .
சந்திரன் - மிதுனம் , சிம்மம் , கன்னி .
செவ்வாய் - சிம்மம் , தனுசு , மீனம்
புதன் - ரிஷபம் , துலாம் , சிம்மம்.
குரு - மேஷம் , சிம்மம் , கன்னி , விருச்சிகம்.
சுக்ரன் - மிதுனம் , தனுசு , மகரம் , கும்பம் .
சனி - ரிஷபம் , மிதுனம்.
ராகு , கேது - மிதுனம் , கன்னி , துலாம் , தனுசு , மீனம் , மகரம்.

பகை வீடுகள்.

சூரியன் - ரிஷபம் , மகரம் , கும்பம் .
சந்திரன் - எல்லா வீடுகளும் நட்பு . ( பகை வீடுகள் கிடையாது )
செவ்வாய் - மிதுனம் , கன்னி .
புதன் - கடகம் , விருச்சிகம் .
குரு - ரிஷபம் , மிதுனம் , துலாம் .
சுக்ரன் - கடகம் , சிம்மம் .
சனி - கடகம் , சிம்மம் , விருச்சிகம் .
ராகு , கேது - கடகம் , சிம்மம .

Friday, May 16, 2008

கிரகங்கள் குறிக்கும் தொழில் - கேது...

மருத்துவம் , ஜோதிடம் , ஆன்மிகம் , தையல்கடை வைத்தல் , கயிறு வியாபாரம் , மின் கம்பிகள் சம்பந்தமான தொழில் , நூற்பாலையில் பணி , மதபோதனை , துறவறம் கொள்ளுதல் , மந்திர சித்தி மூலம் சிகிச்சை அளித்தல்.

Thursday, May 15, 2008

கிரகங்கள் குறிக்கும் தொழில் - ராகு..

ரசாயன பொருட்கள் விற்பனை , மின்னணுவியல் துறை , தொழுநோய் மருத்துவம் , பாம்பாட்டி , ஒற்றர் பணி , வெளிநாடு வர்த்தகம் , போதை பொருட்கள் விற்பனை , விஷமருந்து விற்பனை , சிறைச்சாலையில் பணி செய்தல் , மாந்திரிகம் , கள்ளக்கடத்தல் , புலன் ஆய்வுத்துறை , உளவுத்துறை , திருட்டுத்தொழில் , சினிமாத் தொழில் , அடிமைத்தொழில் , ஏமாற்றி பிழைத்தல் , பழைய பொருட்கள் விற்பனை , சட்டத்திற்கு புறம்பான தொழில்கள் , ஏவல் ,பில்லி , சூனியம் மற்றும் துஷ்ட சக்தி பிரயோகம் செய்தல் .

Wednesday, May 14, 2008

கிரகங்கள் குறிக்கும் தொழில் - சனி...

இரும்பு வியாபாரம் , எண்ணை வியாபாரம் , நிலகரி , சுரங்க தொழில் , கடினமான வேலைகள் , கழிவு பொருட்கள் விற்பனை செய்தல் , தோட்டி வேலை , ஆடு, மாடு , மற்றும் பன்றி வளர்த்தல் , தோல் வியாபாரம் செய்தல் , கருங்கல் மற்றும் மண் வியாபாரம் செய்தல் , மரம் வெட்டுதல் , மரம் விற்பனை செய்தல் , பழைய பொருட்கள் விற்பனை செய்தல் , மயானத்தில் வேலை செய்தல் , செருப்பு தைத்தல் , துப்புரவு பணி , முடிவெட்டும் பணி , கல் மற்றும் மண் சுமத்தல் , கட்டிடத்தில் பணி செய்தல் , தொழிற்சாலைகளில் எடுபிடி வேலை செய்தல் .

Monday, May 12, 2008

கிரகங்கள் குறிக்கும் தொழில் - சுக்கிரன்..

அழகு பொருட்கள் விற்பனை , ஆடம்பர பொருட்கள் விற்பனை ,
சொகுசு பொருட்கள் விற்பனை , வாசனை பொருட்கள் விற்பனை ,
கலை பொருட்கள் விற்பனை , சுவையான உணவு பொருட்கள் விற்பனை ,
பொன் , வெள்ளி மற்றும் வைர வியாபாரம் , கால்நடை வளர்த்தல் , இயல் , இசை , நாடகம் போன்ற கலை தொழில்கள் ,கவிதை எழுதுதல் , பாட்டுபாடுதல் , நடிப்பு தொழில் , துணிமணி வியாபாரம் , கட்டில் மெத்தை வியாபாரம் , சங்கீத கருவி வியாபாரம் , அழகு நிலையம் வைத்தல் , சுற்றுலாதுறை , கேளிக்கை விடுதி வைத்தல் , வகனகளை கொண்டு தொழில் செய்தல் , மது வியாபாரம் , தாங்கும் விடுதி நடத்துதல் , ஓவியம் வரைதல் , சிற்பங்கள் செய்தல் , ஒப்பனை செய்தல் , அழகு போட்டியில் கலந்து கொள்ளுதல் இனிப்பு பண்டங்கள் மற்றும் பழரசம் தயாரித்தல் , வட்டி தொழில் , வங்கி பணி செய்தல் , தரகு தொழில் , நிதி நிறுவனங்களை நடத்துதல் , நிதி திரட்டுதல் , நிதி அமைச்சர் , தணிக்கையாளர் .

Monday, May 5, 2008

கிரகங்கள் குறிக்கும் தொழில் - குரு..

நீதித்துறை , தெய்வப்பணி ,வழக்கறிஞர் , அமைச்சர் , வங்கி மேலாளர் , கௌரவமான தொழில் , உயர்ந்த தொழில் , நிர்வாக பொறுப்புள்ள உத்தியோகம் , நீதித்துறை ஆசிரியர் , ஆன்மீகதுறை , அறநிலையத்துறை , மதபோதகர் , யோகாசன பயிற்சியாளர் , வேதவிற்பன்னர் , தர்ம ஸ்தாபனத்தில் பணி ,ஜோதிடம் , பொருளாதார துறை ,உயிர் பாதுகாப்பு .

Thursday, May 1, 2008

கிரகங்கள் குறிக்கும் தொழில் - புதன்...

ஆசிரியர் , எழுத்தர் , கணக்கர் , ஜோதிடம் , தணிக்கை செய்பவர் , வழக்கறிஞர் , பத்திரிகை தொழில் , தரகு தொழில் , காகித காகிதம் குறிப்பேடுகள் பேனா போன்ற பொருட்கள் விற்பனை ,கணிதத்துறை ,நீதித்துறை ,அஞ்சல் துறை ,செய்தி துறை,தகவல் தொடர்பு துறை, அச்சுத்துறை ,தொலைபேசி ,தந்தி, பத்திரிக்கை , புத்தக வியாபாரம் , பேச்சாளர் ,சட்ட ஆலோசகர் ,தூதரகத்தில் பனி ஒற்றர் வேலை ,புலனாய்வுத்துறை .

Tuesday, April 29, 2008

கிரகங்கள் குறிக்கும் தொழில் - செவ்வாய்...

பூமித் தொழில் , அரசு உத்தியோகம் , காவல்துறை , இராணுவம் , விவசாயம் , நெருப்பு , இரும்பு சம்பந்தமான தொழில் , சமையல் கலை போன்ற தொழில் , பொறியியல் துறை , சுரங்க தொழில் , மின்துறை , கலைகூடத்தில் பணி செய்தல் , தீயணைப்புத் துறை , செங்கல் சூளை வைத்தல் , அறுவை சிகிச்சை மருத்துவர் , உலோக பொருட்கள் , தாது பொருட்கள் , புராதன பொருட்கள் சம்பந்தமான தொழில் , ஆயுதங்கள் செய்தல் , கருவிகள் செய்தல் , கல் உடைத்தல் மற்றும் கல் வியாபாரம் செய்தல்.

Monday, April 28, 2008

கிரகங்கள் குறிக்கும் தொழில் - சந்திரன்.....

நீர் தொடர்பான தொழில் , நீர்பாசனம் , கடல் கடந்து வெளிநாடு செல்கிற தொழில் , பால் ,தயிர் வியாபாரம் செய்தல் , விவசாயம் , உணவு பொருட்கள் விற்பனை செய்தல் , திரவப்பொருட்கள் விற்பனை செய்தல் , மருந்து பொருட்கள விற்பனை செய்தல் , ஜோதிடம் , கதை மற்றும் கவிதை எழுதுதல் , ஆன்மிக குரு போன்ற தொழில் .

கிரகங்கள் குறிக்கும் தொழில் - சூரியன் ......

அரசு உத்தியோகம் , அரசியல் , அரசு மூலம் அனுகூலம் பெறும் தொழில்கள் , முதல் அமைச்சர் பதவி , தந்தை செய்யும் தொழில் , பொன் ஆபரணங்கள் ,மாணிக்க கற்கள் விற்பனை செய்தல் ,மின் அணுவியல் சம்பந்தமான தொழில் , அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்.

Sunday, April 27, 2008

காது மருத்துவர் ......

ஜாதகத்தில் மூன்றாம் அதிபதியுடன் சூரியன் சம்பந்தப்பட்டு இருந்தால் அவர் ஒரு சிறந்த காது மருத்துவர் ஆவார்.

கண் மருத்துவர்....

ஜாதகத்தில் இரண்டாம் வீட்டு அதிபதி 10 இல் சூரியனுடன் சம்பந்தபட்டால் அவர் ஒரு சிறந்த கண் மருத்துவர் ஆவார்.

Saturday, April 26, 2008

குரு பார்வை கோடி நன்மை....

குரு எந்த இல்லத்தில் பலம் குன்றி இருந்தாலும் அதன் பார்வையால் ஏராளமான நன்மை செய்வார் .ஜெனன காலத்தில் பல கிரகங்களை குரு பார்த்து இருந்தால் இந்த ஜாதகர் யோகசாலி . எந்த கிரகத்தையும் குரு பார்க்காமல் இருப்பது மிகவும் தீயது ஆகும்.அந்த ஜாதகர் வாழ்வு இருண்ட பாலைவனம் போன்றது.

Friday, April 25, 2008

நிபுணர் ஆகும் யோகம்......

இரண்டாம் வீட்டு அதிபதியும் புதனும் கூடி இருந்தாலும் சூரியனும் , புதனும் கூடி இருந்தாலும் ஜாதகர் நிபுணத்துவம் பெறுவார்.

சினிமா தொழில் .....

10 இல் செவ்வாயும் ராகுவும் கூடி இருந்தால் சினிமா தொழில் புரிய நேரும் .

வழக்கறிஞர் ஆகலாம் .......

5 ஆம் அதிபதி பலம் பெற்று 10 இல் குரு இருந்தால் அவர் வழக்கறிஞர் ஆகலாம்.

மருத்துவர் ஆகும் அமைப்பு ....

ஜாதகத்தில் சூரியனும் ,செவ்வாயும் கூடி இருந்தாலும் அல்லது கேது 9, 10,11 இல் இருந்தாலும் அவர்களுக்கு மருத்துவம் கைகூடும்.

பூர்விக சொத்து இல்லை ......

லக்னாதிபதி பலம் இன்றி 6, 12 இல் நிற்க ஜென்ம லக்னத்தை பாபர்கள் பார்த்தால் ஜாதகருக்கு பூர்விக சொத்து இருக்காது.

Thursday, April 24, 2008

சொந்த வீடு....

நாலுக்குடையவர் ஆட்சி அல்லது கேந்திர, கோணம் அடைந்தால் சொந்த வீடு அமையும்.நாலுக்குடையவர் 6, 8, 12 இல் அமைந்தாலும் சனி , செவ்வாய் ,ராகு கேது போன்ற பாவிகள் பார்வை செய்தாலும் சொந்த வீடு அமையாது . ஒருவேளை அமைந்தாலும் நிலைக்காது .

இன்ப வாழ்வு.....

நான்காம் அதிபதி கேந்திரம்,திரிகோணம் பெற்றாலும் நான்காம் வீட்டை சுபர்கள் பார்வை செய்தாலும் நல்ல உறக்கம், சுகவாழ்வு, பூரிப்புடன் கூடிய வாழ்வு அமையும் .

Wednesday, April 23, 2008

புதன் கிரகமும் மிதுன லக்னமும்........

மிதுன லக்கினகாரர்களுக்கு, புதனுடன் சூரியன் சேர்ந்திருந்தால் அந்த ஜாதகர் அறிவாளியாக இருப்பார் ;புகழ் பெறுவார்............புதனுடன் சந்திரன் சேர்ந்திருந்தால் இனிமையாக பேசுவார்;கண்ணியமான பேச்சாக இருக்கும் ;கீர்த்திமானாக இருப்பார்......புதனுடன் குரு சேர்ந்திருந்தால் அந்த ஜாதகர் நடிகராக ஒளிவீச முடியும் ........புதனுடன் சனி கூடினால் ஏமாற்று வித்தையில் வல்லவராக இருப்பார்.....

Tuesday, April 22, 2008

தாயார் சுகமாக......

ஜாதகத்தில் சந்திரனும் நான்காம் அதிபதியும் கேந்திர கோணத்தில் அமர ஜாதகனின் தாயார் நீண்ட காலம் செல்வாக்கோடும் பூரண ஆயுளுடன் இருப்பார்.

கல்வித்தடை ......

பாவியின் வீடு இரண்டாம் வீடாகி அதில் புதன் நின்றலோ புதன் இருக்கும் இரண்டாம் இடத்தில் வேறு பாவகிரகம் இருந்தால் கல்வித்தடை உண்டாகும்.

Monday, April 21, 2008

நல்ல குடும்ப தலைவி...

5 இல் குரு , சுக்கிரன் இருந்தால் வெகு புத்திரன் உடையவள் .அத்துடன் கணவனால் கொண்டாட படகூடியவள் ஆவாள். நல்ல குணம் உடையவள் .

Sunday, April 20, 2008

மறுபிறவி இல்லாத ஜாதகம்.........

லக்னத்துக்கு 5 ,12 ஆம் இடத்தில் கேது இடம் பெற்றாலும் கேது திசையில் மரணம் அடைந்தாலும் மறுபிறவி கிடையாது .

தந்தையை விட யோகம்.......

9 க்குடையவன் 10 ல் 10 க்குடையவன் 9 ல் இருந்தால் தந்தையை விட அதிக யோகம் உள்ள ஜாதகம் ஆகும்.

திருமண வாழ்க்கை இனிமையாக........

ஒருவரின் ஜாதகத்தில் 7 மிடம் மற்றும் 8 மிடம் பலம் இல்லாமல் இருந்தால் கூட 9 மிடம் மற்றும் அதன் அதிபதி பலமாக இருந்தால் அவரின் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

Friday, April 18, 2008

மூல நட்சத்திரத்தில் ..........

மூல நட்சத்திரத்தில் பிறந்து லக்னத்திற்கு மூன்றாம் வீடாகிய மாமனார் வீட்டில் கேது அமர்ந்து இருந்தால் மாரக இடமான நான்கு மற்றும் ஒன்பது வீடுகளில் கேது அமர்ந்து இருந்தாலோ மாமனாருக்கு கண்டம் உண்டாக்கும். மற்றபடி மூல நட்சத்திரத்தால் மட்டும் மாமனாருக்கு ஆபத்தை உண்டாக்காது.

தன் வீட்டை தானே பார்க்கும் கிரகம்........

தன் சொந்த வீட்டை தானே திருப்பி பார்க்கும் கிரகம் உச்ச வீட்டின் பலனில் முக்கால் பங்கு பலம் பெரும். தனது வீட்டின் ஆதிபத்திய தன்மையை உறுதி படுத்தும்.

அதுபோல் ஒரு கிரகம் தன்னுடைய சொந்த நட்சத்திர சாரத்தில் நின்றால் தன்னுடைய சுப ஆதிபத்திய பலன்களை மேலும் வலுவாக செய்யும்.

வணக்கம் நண்பர்களே

வணக்கம் நண்பர்களே

இன்று முதல் நான் இந்த வலைப்பூவில் ஜோதிட கட்டுரைகள் எழுத முடிவெடுத்து கணபதியை வணங்கி துவங்குகிறேன்.

அன்புடன்,
திருமதி.விஜயபானு ரகுபதி
ஜோதிட ஆலோசகர் ,சென்னை