Monday, June 30, 2008

சேமிப்பு யாருக்கு? பற்றாகுறை யாருக்கு ?

ஒரு ஜாதகத்தில் 12 ஆம் வீட்டை விட 11 ஆம் வீடு பலம் உடையதாக இருந்தால் செலவை விட சேமிப்பு அதிகமாக இருக்கும். அஷ்டவர்க்கம் கணிதப்படி12 ஆம் வீட்டை விட 11 ஆம் வீட்டில் பரல்கள் அதிகம் இருந்தால் மட்டுமே ஒருவரால் பணம் சேமிக்க இயலும் .இதற்க்கு மாறாக 12 ஆம் வீடு அதிக பரல்கள் பெற்று விட்டால் செலவுகளே அதிகப்படும்.

Friday, June 27, 2008

எப்படிப்பட்ட கணவர் அமைவார்

ஒரு பெண்ணுடைய ஜாதகத்தில் 7 மிடத்தில் சுக்ரன் இருந்தாலோ அல்லது சம்பந்தம் பெற்று இருந்தாலோ அழகும் , அதிர்ஷ்டமும் உடைய கணவர் அமைவார்.

செவ்வாய் இருந்தாலோ அல்லது சம்பந்தம் பெற்று இருந்தாலோ
முன்கோபம் கொண்ட கணவராகவும் மற்றும் தைர்யம் மிகுந்தவராகவும் இருப்பார்.

புதன் இருந்தாலோ அல்லது சம்பந்தம் பெற்று இருந்தாலோ
படித்த மற்றும் புத்திசாலித்தனம் மிகுந்த கணவராக இருப்பார்.

குரு இருந்தாலோ அல்லது சம்பந்தம் பெற்று இருந்தாலோ
நல்ல பண்புகள் உடைய மற்றும் நீதி நெறிப்படி செயல்படுவராகவும் இருப்பார்.

சனி இருந்தாலோ அல்லது சம்பந்தம் பெற்று இருந்தாலோ
வயது அதிகம் உடையவராகவும் மற்றும் கோபம் அதிகம் உடையவராகவும் இருப்பார்.

Thursday, June 26, 2008

லக்னாதிபதி மற்றும் சூரியன் ....

ஒருவருடைய ஜாதகத்தில் லக்னாதிபதி என்று சொல்ல கூடிய ஒன்றாம் வீட்டின் அதிபதியும் ஆத்மக்காரன் என்று சொல்லக்கூடிய சூரியனும் நன்கு அமைய வேண்டும்.அதாவது ஆட்சி , உச்சம் , கேந்திர மற்றும் திரிகோண ஸ்தானங்களில் அமர வேண்டும் . மறைவு ஸ்தானங்களில் அமரக்கூடாது .அவ்வாறு நன்கு அமைந்து இருப்பின் ஜாதகர் எத்தகைய துன்பங்களையும் , கஷ்ட நஷ்டங்களையும் கடந்து வெற்றி கொள்வார் .

Wednesday, June 25, 2008

வாகன யோகம்

ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் மற்றும் நான்காம் வீட்டை கொண்டு வாகன யோகம் இருக்கிறதா என்று சொல்ல முடியும்.நான்காம் வீடு பலம் பொருந்தி இருக்கவேண்டும் .அதாவது ஆட்சி உச்சம் கேந்திர ( 1 , 4 , 7 , 10 ) அல்லது திரிகோணம் ( 5 , 7 , 9 ) இருக்கவேண்டும் .இந்த பலத்தை வைத்து தான் அவர் விலை உயர்ந்த வாகனத்தில் செல்வாரா என்று சொல்ல முடியும்.

Tuesday, June 24, 2008

அர்த்தாஷ்டம சனி ...

ஒருவரது ஜென்ம ராசியில் இருந்து கோட்சார ரீதியாக 4 ஆம் இடத்தில் சனி பகவான் வரும் காலத்தை அர்த்தாஷ்டம சனி என்கிறோம்.ஜென்ம ராசிக்கு நான்காம் வீட்டில் சஞ்சரிக்கும் காலத்தில் குடும்பத்தில் பல்வேறு சிக்கல்களை அடைவார் .உறவினர் மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்படும் .தொழில் அல்லது வியாபார துறையில் இழுபறி நிலை நீடிக்கும் .ஜாதகர் சுகக்கேட்டை அடைவார். குடும்ப சுமைகள் கூடும் . சுருக்கமாக கூறுவதென்றால் அஷ்டம சனி நடப்பதை போன்று தோன்றும் . ரிஷப ராசிக்காரர்களுக்கு தற்பொழுது அர்த்தாஷ்டம சனி நடப்பில் உள்ளது .

Monday, June 23, 2008

அஷ்டமத்து சனி ...........

ஒருவரது ஜென்ம ராசிக்கு கோட்சார ரீதியாக 8 ஆம் வீட்டில் சனி வரும் காலமே அஷ்டமத்து சனி எனப்படும் .இக்காலத்தில் ஒருவர் பல்வேறு தடங்கல்களையும் இடையுறுகளையும் சந்திக்க கூடும் .முயற்சிகள் எளிதில் வெற்றி அளிக்காது .உடல் நலம் பாதிப்படையும் . பொருள் இழப்புகள் ஏற்படும் . கெட்ட தசா புக்திகள் நடப்பில் இருந்தால் கஷ்ட நஷ்டங்கள் ஏற்படும் .

தற்பொழுது மகர ராசிக்காரர்களுக்கு அஷ்டமத்து சனி நடப்பில் உள்ளது.

Sunday, June 22, 2008

யாருக்கு ஏழரை சனி

கன்னி ராசிக்கு 12 இல் விரைய சனியும் , சிம்ம ராசிக்கு ஜென்ம சனியாகவும் , கடக ராசிக்கு 2 இல் குடும்ப சனியாக உலவிகொண்டிருகிறது .

Saturday, June 21, 2008

ஏழரை சனி

நமது ராசியில் இருந்து 12 , 1 , 2 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் காலத்தை தான் ஏழரை சனி என்கிறோம் . இந்த ஏழரை ஆண்டுகள் எல்லோருமே சிற்சில சங்கடங்களை அடைவதை கண்கூடாகக் காண்கின்றோம் . உண்மையில் ஏழரை சனி நடை பெரும் காலத்தில் ஒருவரது வாழ்கைப் பாதையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழும் .

ஒருவரது ஜென்ம ராசிக்கு 12 சஞ்சரிக்கும் 2 1/2 ஆண்டு காலமும் துன்பங்கள் தொடர்வதை போன்ற உணர்வு ஏற்பட்டுவிடும் .பொருள் விரயமாவது , தொழில் வழியில் முடக்கம் , அல்லது புதிய தொழில் முதலீடு செய்ய வேண்டிய கட்டாயம் . போட்ட முதலுக்கேற்ப வருமானம் இருக்காது . இட மாற்றங்கள் , குடும்ப உறுபினர்களை பிரித்து வாழ்வது . வீடு கட்டுதல் , திருமணம் போன்ற சுபகாரியம் செய்தல் .பெரும்பாலும் வீண் அலைச்சல் , கஷ்ட நஷ்டம் , உடல் உழைப்பு மிகுந்து காணப்படும்.

ஒருவரது ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் 2 1/2 ஆண்டுகள் வீண் வம்பு - வழக்கு விவகாரம் தோன்றும் .சிறு விபத்துகள் நேரும் . எக்காரியமும் நினைத்தபடி நடக்காது. முக பொலிவு குறைந்து காணப்படும் . செய்தொழில் முடக்கம் ஏற்படும் . எதிலும் எப்போதும் ஏதேனும் கவலை இருந்து வரும் . மன உளைச்சல் ஏற்படும் .

ஒருவரது ஜென்ம ராசிக்கு 2 சஞ்சரிக்கும் 2 1/2 ஆண்டு காலம் குடும்ப கவலை அடைவர் . பணம் கிடைத்தாலும் தங்காது . எவ்வளவு வரவு ஏற்பட்டாலும் செலவுகள் ஏற்பட்டு கரைந்துவிடும் . வீண் பயம் குடிகொள்ளும் . முன்னுக்குப் பின் முரணாக பேசுவர் , கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும்.

Friday, June 20, 2008

சனி பெயர்ச்சி - ஏழரை சனி

கிரகங்களில் சனி கிரகம் மட்டுமே ஒரு ராசியில் 2 1/2 வருடம் இருக்கும்.இதனால் ஒரு ராசி சக்ரத்தை சுற்றி வர 30 வருடம் ஆகும்.பொதுவாக கோட்சாரத்தில் அதாவது ராசியில் இருந்து சனி 3 , 6 , 11 இடங்களுக்கு வரும் பொது நல்ல பலன்கள் தரும்.கோட்சாரத்தில் 12 , 1 , 2 வரும் காலத்தை தான் ஏழரை சனி என்கிறோம் .இந்த 7 1/2 வருடங்களில் சனி ஒரு மனிதனின் வாழ்வில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் .குடும்பம் என்றால் என்ன ? மனைவி என்றால் என்ன? குழந்தைகள் என்றால் என்ன ? என்ற வாழ்க்கை தத்துவத்தை நன்கு புரிந்து கொள்கிறான் . பணத்தின் அருமையும் மற்றவர்களோடு எப்படி பழக வேண்டும் என்ற உண்மையும் புரிய வைத்து அவனது வாழ்கையை சனி பகவான் செம்மைப்படுத்துகிறார் . இந்த அனுபவங்களை பயன்படுத்தி வாழ்கையில் வெற்றி பெற உதவுகிறார் . எனவே ஏழரை சனி நடை பெற்றால் நாம் வருத்தபடவேன்டியது இல்லை .

Thursday, June 19, 2008

குரு பெயர்ச்சி ..

குரு கிரகம் ஒரு ராசியை கடக்க சுமார் ஒரு வருடம் ஆகும் . இப்படி அவர் 12 ராசிகளையும் கடக்க 12 வருடம் எடுப்பார். ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு செல்வதை தான் குரு பெயர்ச்சி என்கிறோம் .ஜெனன ஜாதகத்தில் சந்திரனில் இருந்து தான் குரு பெயர்ச்சியை கணிக்கிறோம்.பொதுவாக கோட்சாரத்தில் குரு 5 , 7 , 9 , 11 ஆகிய இடங்களுக்கு செல்லும் பொது திருமணம் போன்ற சுபகாரியங்கள் , வேலை வாய்ப்பு , செல்வம் , குழந்தை பாக்கியம் போன்றவற்றை தருகிறார். தற்சமயம் தனுசு ராசியில் இருக்கும் குரு வருகிற டிசம்பர் 6 . 2008 அன்று மகர ராசிக்கு செல்கிறார் .

Monday, June 16, 2008

யோககாரகன் என்றால் என்ன ?

ஒரு லக்னதிற்கு கேந்திர மற்றும் திரிகோணத்திற்கு ஆதிபத்தியம் பெரும் கிரகம் யோகத்தை செய்யும் .சனி , சுக்கிரன் , செவ்வாய் போன்ற கிரகங்கள் இந்த பட்டியலில் அடங்கும் .மேலும் 9 மற்றும் 10 இடங்களுக்கு அதிபதியும் யோகத்தை செய்வார்கள் .

Sunday, June 15, 2008

களத்திர தோஷம் ..

லக்னதிற்கு 7 வது இடம் களத்திர ஸ்தானம் எனப்படும். இவ்வாறு 7 ஆம் இடத்தில் சூரியன் , செவ்வாய் , சனி , சுக்கிரன் , ராகு , கேது இருந்தாலும் 7 ஆம் அதிபதி பலம் குன்றி இருந்தாலும் களத்திர தோஷமாகும்.இதற்கு தகுந்த பரிகாரம் செய்வதால் திருமண தாமதம் மற்றும் இந்த கிரகங்கள் செய்ய கூடிய தீய பலனை குறைய செய்யும் .

Saturday, June 14, 2008

கிரகங்களின் காரகத்துவம்....

சூரியன் - ஆத்மகாரகன் ; தந்தைகாரகன்

சந்திரன் - மாத்ருகாரகன்

செவ்வாய் - சகோதரகாரகன்

குரு - புத்திரகாரகன்

சுக்கிரன் - களத்திரகாரகன்

புதன் - மாமன்காரகன் ;கல்விகாரகன்

சனி - ஆயுள்காரகன்

ராகு , கேது - காரகத்துவம் கிடையாது .

ஒரு கிரகம் ஆட்சி உச்சம் பெற்று இருந்தாலோ அல்லது கேந்திர , திரிகோண ஸ்தானங்களில் சுப பலத்துடன் இருந்தாலோ அந்த கிரகத்தின் காரகத்துவ பலன்களை நல்ல வலிமையுடன் செயல் படுத்தும் . உதாரணமாக

- செவ்வாய் இது போன்று இருந்தால் சகோதரனுக்கு நன்மை செய்யும் .
- சூரியன் இது போன்று இருந்தால் தந்தைக்கு நன்மை செய்யும் .

இதற்கு மாறாக ஒரு கிரகம் நீசம் பெற்றோ அல்லது அசுப பலன் பெற்று இருந்தால் நன்மைக்கு பதிலாக தீமையே செய்யும் .

Thursday, June 12, 2008

மாங்கல்ய தோஷம்

லக்னத்துக்கு 8 மிடம் மாங்கல்ய ஸ்தானம் ஆகும் .இதில் கிரகங்கள் இல்லாமல் இருப்பது மிகவும் நல்லதாகும் ...சுப கிரகங்கள் இடம் பெற்றாலும் கூட குறைந்த அளவில் தோஷத்தை ஏற்படுத்தும் .ஆனால் பாவ கிரகங்கள் இடம் பெற்றால் மாங்கல்ய தோஷம் உண்டாகும் .இதனால் திருமணம் தாமதமாகும் மற்றும் திருமணம் நடந்த பிறகு பாதிப்பு உண்டாக்கும் .தகுந்த பரிகாரம் மற்றும் கோவில் வழிபாடுகள் செய்து கொள்வது மிகவும் நல்லது .

Saturday, June 7, 2008

புத்திர தோஷம்

5 ல் ராகு ,கேது போன்ற பாவ கிரகங்கள் அல்லது குரு கிரகமோ இருந்து 3 க்கு உடையவர் ஜாதகத்தில் பலம் இல்லாத நிலையில் இருந்து ,9 மிட பாக்கியதிபதியும் வலுவிழந்து காணப்பட்டால்,புத்திர தோஷம் கண்டிப்பாக உண்டாகும்.

Friday, June 6, 2008

யோகம் கெட்ட ஜாதகம்

ஒரு ஜாதகத்தில் 9 க்கு உடைய கிரகம் 8 ல் இடம் பெற்றாலோ அல்லது 10 க்கு உடைய கிரகம் 11 ல் இடம் பெற்றாலோ அந்த ஜாதகத்தில் உள்ள யோகம் கெட்டு விடும் . குரு பார்வை அந்த இடத்திற்கு கிடைத்தால் ஓரளவு யோக பலன்கள் உண்டாகும்.

Thursday, June 5, 2008

பாதகமான தாக்கத்தை உருவாக்கும் பாதகாதிபதி

பாதகாதிபதி பலம் வாய்ந்த எந்த பாவங்களில் இருக்கிறாரோ அந்த பாவங்களில் உருவாகும் பலன்களில் பாதகத்தை செய்வர் .மேலும் பாதகாதிபதி எந்த இடத்தை பார்க்கிறாரோ அந்த இடத்தின் பலன்களும் பாதிக்கப்படும் .

மேஷம் , கடகம் , துலாம் , மகரம் ஆகிய லக்னங்களுக்கு - 11 ஆம் வீடு மற்றும் அதன் அதிபதி பாதகாதிபதி ஆகும்.

ரிஷபம் , சிம்மம் , விருச்சிகம் , கும்பம் ஆகிய லக்னங்களுக்கு - 9 ஆம் வீடு மற்றும் அதன் அதிபதி பாதகாதிபதி ஆகும்.

மிதுனம் , கன்னி , தனுசு , மீனம் ஆகிய லக்னங்களுக்கு - 7 ஆம் வீடு மற்றும் அதன் அதிபதி பாதகாதிபதி ஆகும்.

Wednesday, June 4, 2008

பலன் அளிக்க கூடிய பரிகார ஸ்தலங்கள் ....

சூரியன் - சூரியனார் கோவில் .

சந்திரன் - திருப்பதி .

குரு - ஆலங்குடி , திருச்செந்தூர் .

சுக்கிரன் - ஸ்ரீ ரங்கம் .

புதன் - திருவெண்காடு , மதுரை மீனாட்சி அம்மன் கோவில் .

செவ்வாய் - வைத்திஸ்வரன் கோவில் .

சனி - திருநள்ளாறு .

ராகு - திருநாகேஷ்வரம் .

கேது - காளாஸ்திரி . ( ஆந்திரப் பிரதேசம் )

திருமணம் செய்து கொள்ள .....

குரு பகவான் ஜென்ம ராசிக்கு 2 , 5 , 7 , 9 , 11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் பொழுது திருமணம் நடைபெறும் .ஆணின் அல்லது பெண்ணின் ஜாதகத்தில் 7 ஆம் வீட்டிற்கு அதிபதி , 7 இல் இருக்கும் கிரகம் , 7 ஆம் வீட்டை பார்க்கும் கிரகம் - இதன் திசா புக்தி காலங்களில் குரு பலம் அமையும் பொழுது திருமணம் நடைபெறும் .

Tuesday, June 3, 2008

ஆயுள் காக்கும் சனியின் பலம் ....

லக்னத்திற்கோ அல்லது சந்திரனுக்கோ சனி பகை படாமல் நீசம் அடையாமல் இருந்தால் ஜாதகருக்கு ஆயுள் பலம் உண்டு .8 ஆம் இடத்தை சனி பார்த்தாலும் ,இருந்தாலும் 8 ஆம் இடம் சுத்தமாக இருந்தாலும் நீண்ட ஆயுள் உண்டு .

Monday, June 2, 2008

தன லாபம் உடையவர் .....

லக்னாதிபதி 1, 4 , 5 , 7 , 9 , 10 இந்த வீடுகளில் இருந்து 11 ஆம் இடத்தை பாபகிரகம் சேராது இருந்தாலும் அல்லது 2 க்குடையவன் 11 இல் 11 க்குடையவன் 2 இல் இருந்தாலும் அல்லது 2 , 11 க்குடையவர் கூடி 1 , 4 , 5 , 7 , 9 , 10 இல் இருந்தாலும் 11 க்குடையவன் இருக்கும் ராசிநாதன் சுபகிரகங்களுடன் சேர்ந்தோ அல்லது பார்த்தோ இருந்தாலும் அந்த ஜாதகன் தன லாபம் அடைவான் .

மாளிகையில் வசிக்கும் யோகம்...

லக்னாதிபதி லக்னத்தில் அல்லது 4 ஆம் வீட்டில் இருந்தாலும் 4 க்குடையவன் உச்ச வீட்டிலோ அல்லது ஆட்சி வீட்டிலோ சுபகிரகங்கள் பார்வை பெற்றால் மாளிகையில் வசிக்கும் யோகம் வரும்.

Sunday, June 1, 2008

ராகு திசை .....

ஜெனன காலத்தில் ராகு 3 , 6 , 11 இல் இடம் பெற்றோ அல்லது குரு பார்வை பெற்று ராகு திசை நடத்தினால் நல்ல யோக பலனை தரும் .

வியாபாரத்தில் சிறந்து விளங்கும் அமைப்பு ....

ஒருவரின் ஜாதகத்தில் புதனும் செவ்வாயும் 1 , 4 , 5 , 7 , 9 , 10 ஆகிய வீடுகளில் சுபபலத்துடன் காணப்பட்டால் அவர் வியாபாரத்தில் சிறந்து விளங்குவார்.