Saturday, June 21, 2008

ஏழரை சனி

நமது ராசியில் இருந்து 12 , 1 , 2 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் காலத்தை தான் ஏழரை சனி என்கிறோம் . இந்த ஏழரை ஆண்டுகள் எல்லோருமே சிற்சில சங்கடங்களை அடைவதை கண்கூடாகக் காண்கின்றோம் . உண்மையில் ஏழரை சனி நடை பெரும் காலத்தில் ஒருவரது வாழ்கைப் பாதையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழும் .

ஒருவரது ஜென்ம ராசிக்கு 12 சஞ்சரிக்கும் 2 1/2 ஆண்டு காலமும் துன்பங்கள் தொடர்வதை போன்ற உணர்வு ஏற்பட்டுவிடும் .பொருள் விரயமாவது , தொழில் வழியில் முடக்கம் , அல்லது புதிய தொழில் முதலீடு செய்ய வேண்டிய கட்டாயம் . போட்ட முதலுக்கேற்ப வருமானம் இருக்காது . இட மாற்றங்கள் , குடும்ப உறுபினர்களை பிரித்து வாழ்வது . வீடு கட்டுதல் , திருமணம் போன்ற சுபகாரியம் செய்தல் .பெரும்பாலும் வீண் அலைச்சல் , கஷ்ட நஷ்டம் , உடல் உழைப்பு மிகுந்து காணப்படும்.

ஒருவரது ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் 2 1/2 ஆண்டுகள் வீண் வம்பு - வழக்கு விவகாரம் தோன்றும் .சிறு விபத்துகள் நேரும் . எக்காரியமும் நினைத்தபடி நடக்காது. முக பொலிவு குறைந்து காணப்படும் . செய்தொழில் முடக்கம் ஏற்படும் . எதிலும் எப்போதும் ஏதேனும் கவலை இருந்து வரும் . மன உளைச்சல் ஏற்படும் .

ஒருவரது ஜென்ம ராசிக்கு 2 சஞ்சரிக்கும் 2 1/2 ஆண்டு காலம் குடும்ப கவலை அடைவர் . பணம் கிடைத்தாலும் தங்காது . எவ்வளவு வரவு ஏற்பட்டாலும் செலவுகள் ஏற்பட்டு கரைந்துவிடும் . வீண் பயம் குடிகொள்ளும் . முன்னுக்குப் பின் முரணாக பேசுவர் , கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும்.