Tuesday, April 29, 2008

கிரகங்கள் குறிக்கும் தொழில் - செவ்வாய்...

பூமித் தொழில் , அரசு உத்தியோகம் , காவல்துறை , இராணுவம் , விவசாயம் , நெருப்பு , இரும்பு சம்பந்தமான தொழில் , சமையல் கலை போன்ற தொழில் , பொறியியல் துறை , சுரங்க தொழில் , மின்துறை , கலைகூடத்தில் பணி செய்தல் , தீயணைப்புத் துறை , செங்கல் சூளை வைத்தல் , அறுவை சிகிச்சை மருத்துவர் , உலோக பொருட்கள் , தாது பொருட்கள் , புராதன பொருட்கள் சம்பந்தமான தொழில் , ஆயுதங்கள் செய்தல் , கருவிகள் செய்தல் , கல் உடைத்தல் மற்றும் கல் வியாபாரம் செய்தல்.

Monday, April 28, 2008

கிரகங்கள் குறிக்கும் தொழில் - சந்திரன்.....

நீர் தொடர்பான தொழில் , நீர்பாசனம் , கடல் கடந்து வெளிநாடு செல்கிற தொழில் , பால் ,தயிர் வியாபாரம் செய்தல் , விவசாயம் , உணவு பொருட்கள் விற்பனை செய்தல் , திரவப்பொருட்கள் விற்பனை செய்தல் , மருந்து பொருட்கள விற்பனை செய்தல் , ஜோதிடம் , கதை மற்றும் கவிதை எழுதுதல் , ஆன்மிக குரு போன்ற தொழில் .

கிரகங்கள் குறிக்கும் தொழில் - சூரியன் ......

அரசு உத்தியோகம் , அரசியல் , அரசு மூலம் அனுகூலம் பெறும் தொழில்கள் , முதல் அமைச்சர் பதவி , தந்தை செய்யும் தொழில் , பொன் ஆபரணங்கள் ,மாணிக்க கற்கள் விற்பனை செய்தல் ,மின் அணுவியல் சம்பந்தமான தொழில் , அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்.

Sunday, April 27, 2008

காது மருத்துவர் ......

ஜாதகத்தில் மூன்றாம் அதிபதியுடன் சூரியன் சம்பந்தப்பட்டு இருந்தால் அவர் ஒரு சிறந்த காது மருத்துவர் ஆவார்.

கண் மருத்துவர்....

ஜாதகத்தில் இரண்டாம் வீட்டு அதிபதி 10 இல் சூரியனுடன் சம்பந்தபட்டால் அவர் ஒரு சிறந்த கண் மருத்துவர் ஆவார்.

Saturday, April 26, 2008

குரு பார்வை கோடி நன்மை....

குரு எந்த இல்லத்தில் பலம் குன்றி இருந்தாலும் அதன் பார்வையால் ஏராளமான நன்மை செய்வார் .ஜெனன காலத்தில் பல கிரகங்களை குரு பார்த்து இருந்தால் இந்த ஜாதகர் யோகசாலி . எந்த கிரகத்தையும் குரு பார்க்காமல் இருப்பது மிகவும் தீயது ஆகும்.அந்த ஜாதகர் வாழ்வு இருண்ட பாலைவனம் போன்றது.

Friday, April 25, 2008

நிபுணர் ஆகும் யோகம்......

இரண்டாம் வீட்டு அதிபதியும் புதனும் கூடி இருந்தாலும் சூரியனும் , புதனும் கூடி இருந்தாலும் ஜாதகர் நிபுணத்துவம் பெறுவார்.

சினிமா தொழில் .....

10 இல் செவ்வாயும் ராகுவும் கூடி இருந்தால் சினிமா தொழில் புரிய நேரும் .

வழக்கறிஞர் ஆகலாம் .......

5 ஆம் அதிபதி பலம் பெற்று 10 இல் குரு இருந்தால் அவர் வழக்கறிஞர் ஆகலாம்.

மருத்துவர் ஆகும் அமைப்பு ....

ஜாதகத்தில் சூரியனும் ,செவ்வாயும் கூடி இருந்தாலும் அல்லது கேது 9, 10,11 இல் இருந்தாலும் அவர்களுக்கு மருத்துவம் கைகூடும்.

பூர்விக சொத்து இல்லை ......

லக்னாதிபதி பலம் இன்றி 6, 12 இல் நிற்க ஜென்ம லக்னத்தை பாபர்கள் பார்த்தால் ஜாதகருக்கு பூர்விக சொத்து இருக்காது.

Thursday, April 24, 2008

சொந்த வீடு....

நாலுக்குடையவர் ஆட்சி அல்லது கேந்திர, கோணம் அடைந்தால் சொந்த வீடு அமையும்.நாலுக்குடையவர் 6, 8, 12 இல் அமைந்தாலும் சனி , செவ்வாய் ,ராகு கேது போன்ற பாவிகள் பார்வை செய்தாலும் சொந்த வீடு அமையாது . ஒருவேளை அமைந்தாலும் நிலைக்காது .

இன்ப வாழ்வு.....

நான்காம் அதிபதி கேந்திரம்,திரிகோணம் பெற்றாலும் நான்காம் வீட்டை சுபர்கள் பார்வை செய்தாலும் நல்ல உறக்கம், சுகவாழ்வு, பூரிப்புடன் கூடிய வாழ்வு அமையும் .

Wednesday, April 23, 2008

புதன் கிரகமும் மிதுன லக்னமும்........

மிதுன லக்கினகாரர்களுக்கு, புதனுடன் சூரியன் சேர்ந்திருந்தால் அந்த ஜாதகர் அறிவாளியாக இருப்பார் ;புகழ் பெறுவார்............புதனுடன் சந்திரன் சேர்ந்திருந்தால் இனிமையாக பேசுவார்;கண்ணியமான பேச்சாக இருக்கும் ;கீர்த்திமானாக இருப்பார்......புதனுடன் குரு சேர்ந்திருந்தால் அந்த ஜாதகர் நடிகராக ஒளிவீச முடியும் ........புதனுடன் சனி கூடினால் ஏமாற்று வித்தையில் வல்லவராக இருப்பார்.....

Tuesday, April 22, 2008

தாயார் சுகமாக......

ஜாதகத்தில் சந்திரனும் நான்காம் அதிபதியும் கேந்திர கோணத்தில் அமர ஜாதகனின் தாயார் நீண்ட காலம் செல்வாக்கோடும் பூரண ஆயுளுடன் இருப்பார்.

கல்வித்தடை ......

பாவியின் வீடு இரண்டாம் வீடாகி அதில் புதன் நின்றலோ புதன் இருக்கும் இரண்டாம் இடத்தில் வேறு பாவகிரகம் இருந்தால் கல்வித்தடை உண்டாகும்.

Monday, April 21, 2008

நல்ல குடும்ப தலைவி...

5 இல் குரு , சுக்கிரன் இருந்தால் வெகு புத்திரன் உடையவள் .அத்துடன் கணவனால் கொண்டாட படகூடியவள் ஆவாள். நல்ல குணம் உடையவள் .

Sunday, April 20, 2008

மறுபிறவி இல்லாத ஜாதகம்.........

லக்னத்துக்கு 5 ,12 ஆம் இடத்தில் கேது இடம் பெற்றாலும் கேது திசையில் மரணம் அடைந்தாலும் மறுபிறவி கிடையாது .

தந்தையை விட யோகம்.......

9 க்குடையவன் 10 ல் 10 க்குடையவன் 9 ல் இருந்தால் தந்தையை விட அதிக யோகம் உள்ள ஜாதகம் ஆகும்.

திருமண வாழ்க்கை இனிமையாக........

ஒருவரின் ஜாதகத்தில் 7 மிடம் மற்றும் 8 மிடம் பலம் இல்லாமல் இருந்தால் கூட 9 மிடம் மற்றும் அதன் அதிபதி பலமாக இருந்தால் அவரின் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

Friday, April 18, 2008

மூல நட்சத்திரத்தில் ..........

மூல நட்சத்திரத்தில் பிறந்து லக்னத்திற்கு மூன்றாம் வீடாகிய மாமனார் வீட்டில் கேது அமர்ந்து இருந்தால் மாரக இடமான நான்கு மற்றும் ஒன்பது வீடுகளில் கேது அமர்ந்து இருந்தாலோ மாமனாருக்கு கண்டம் உண்டாக்கும். மற்றபடி மூல நட்சத்திரத்தால் மட்டும் மாமனாருக்கு ஆபத்தை உண்டாக்காது.

தன் வீட்டை தானே பார்க்கும் கிரகம்........

தன் சொந்த வீட்டை தானே திருப்பி பார்க்கும் கிரகம் உச்ச வீட்டின் பலனில் முக்கால் பங்கு பலம் பெரும். தனது வீட்டின் ஆதிபத்திய தன்மையை உறுதி படுத்தும்.

அதுபோல் ஒரு கிரகம் தன்னுடைய சொந்த நட்சத்திர சாரத்தில் நின்றால் தன்னுடைய சுப ஆதிபத்திய பலன்களை மேலும் வலுவாக செய்யும்.

வணக்கம் நண்பர்களே

வணக்கம் நண்பர்களே

இன்று முதல் நான் இந்த வலைப்பூவில் ஜோதிட கட்டுரைகள் எழுத முடிவெடுத்து கணபதியை வணங்கி துவங்குகிறேன்.

அன்புடன்,
திருமதி.விஜயபானு ரகுபதி
ஜோதிட ஆலோசகர் ,சென்னை