Wednesday, June 4, 2008

பலன் அளிக்க கூடிய பரிகார ஸ்தலங்கள் ....

சூரியன் - சூரியனார் கோவில் .

சந்திரன் - திருப்பதி .

குரு - ஆலங்குடி , திருச்செந்தூர் .

சுக்கிரன் - ஸ்ரீ ரங்கம் .

புதன் - திருவெண்காடு , மதுரை மீனாட்சி அம்மன் கோவில் .

செவ்வாய் - வைத்திஸ்வரன் கோவில் .

சனி - திருநள்ளாறு .

ராகு - திருநாகேஷ்வரம் .

கேது - காளாஸ்திரி . ( ஆந்திரப் பிரதேசம் )

திருமணம் செய்து கொள்ள .....

குரு பகவான் ஜென்ம ராசிக்கு 2 , 5 , 7 , 9 , 11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் பொழுது திருமணம் நடைபெறும் .ஆணின் அல்லது பெண்ணின் ஜாதகத்தில் 7 ஆம் வீட்டிற்கு அதிபதி , 7 இல் இருக்கும் கிரகம் , 7 ஆம் வீட்டை பார்க்கும் கிரகம் - இதன் திசா புக்தி காலங்களில் குரு பலம் அமையும் பொழுது திருமணம் நடைபெறும் .

Tuesday, June 3, 2008

ஆயுள் காக்கும் சனியின் பலம் ....

லக்னத்திற்கோ அல்லது சந்திரனுக்கோ சனி பகை படாமல் நீசம் அடையாமல் இருந்தால் ஜாதகருக்கு ஆயுள் பலம் உண்டு .8 ஆம் இடத்தை சனி பார்த்தாலும் ,இருந்தாலும் 8 ஆம் இடம் சுத்தமாக இருந்தாலும் நீண்ட ஆயுள் உண்டு .

Monday, June 2, 2008

தன லாபம் உடையவர் .....

லக்னாதிபதி 1, 4 , 5 , 7 , 9 , 10 இந்த வீடுகளில் இருந்து 11 ஆம் இடத்தை பாபகிரகம் சேராது இருந்தாலும் அல்லது 2 க்குடையவன் 11 இல் 11 க்குடையவன் 2 இல் இருந்தாலும் அல்லது 2 , 11 க்குடையவர் கூடி 1 , 4 , 5 , 7 , 9 , 10 இல் இருந்தாலும் 11 க்குடையவன் இருக்கும் ராசிநாதன் சுபகிரகங்களுடன் சேர்ந்தோ அல்லது பார்த்தோ இருந்தாலும் அந்த ஜாதகன் தன லாபம் அடைவான் .

மாளிகையில் வசிக்கும் யோகம்...

லக்னாதிபதி லக்னத்தில் அல்லது 4 ஆம் வீட்டில் இருந்தாலும் 4 க்குடையவன் உச்ச வீட்டிலோ அல்லது ஆட்சி வீட்டிலோ சுபகிரகங்கள் பார்வை பெற்றால் மாளிகையில் வசிக்கும் யோகம் வரும்.

Sunday, June 1, 2008

ராகு திசை .....

ஜெனன காலத்தில் ராகு 3 , 6 , 11 இல் இடம் பெற்றோ அல்லது குரு பார்வை பெற்று ராகு திசை நடத்தினால் நல்ல யோக பலனை தரும் .

வியாபாரத்தில் சிறந்து விளங்கும் அமைப்பு ....

ஒருவரின் ஜாதகத்தில் புதனும் செவ்வாயும் 1 , 4 , 5 , 7 , 9 , 10 ஆகிய வீடுகளில் சுபபலத்துடன் காணப்பட்டால் அவர் வியாபாரத்தில் சிறந்து விளங்குவார்.