Showing posts with label Vedic Astrology. Show all posts
Showing posts with label Vedic Astrology. Show all posts

Monday, September 22, 2008

கன்னி ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்

உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : மூவனுர் வாஞ்சியாம்மன்

ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாரூர் ராஜதுர்கை

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாரூர் ராஜதுர்கை


நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்றால் வாழ்வில் ஒரு முறையாவது மேற்கண்ட கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும்.

இன்னும் வரும் - தகவல் உதவி (http://www.pariharam.com/)

Friday, July 18, 2008

சனி பெயர்ச்சியும் அஷ்ட வர்க்க பரல்களும்

அஷ்ட வர்க்க பரல்கள் கணித்து பார்ப்பதிலே ஒரு நன்மை உண்டு. பொதுவாக சந்திரா லக்கினத்திற்கு 3,6,11 ஆகிய வீடுகளில் சனி உலவும்போது நன்மைகள் செய்வர். அதே நேரத்தில் ஒருவருடைய தனிப்பட்ட ஜாதகத்தில் கூடுதலான பரல்களை இந்த இடங்கள் பெற்று இருந்தால் மிகவும் விசேஷமான நன்மைகள் செய்யும். அதே போல் தீமைகள் உண்டாக்கும் ஏழரை சனி அஷ்டம சனி காலங்களில் அந்த இடங்கள் பரல்கள் அதிகம் பெற்றால் அதிக தீமைகளை செய்யாது.

Thursday, July 17, 2008

அஷ்டவர்க்கம்

ஒரு வீட்டின் தனிப்பட்ட பரல் சராசரியாக 28 இருக்கவேண்டும். 30 க்கு மேல் இருந்தால் அந்த வீட்டின் பலம் நன்றாக உள்ளது என்று அர்த்தம் கொள்ளவேண்டும். 28 கும் குறைவாக இருந்தால் பலம் குறைவாக உள்ளது என்று அர்த்தம் கொள்ளவேண்டும் .


ஒரு கிரகத்தின் தனிப்பட்ட பரல் சராசரியாக 4 இருக்கவேண்டும். 8 க்கு மேல் இருந்தால் அந்த குறிப்பிட்ட கிரகத்தின் பலம் நன்றாக உள்ளது என்று அர்த்தம் கொள்ளவேண்டும். 4 கும் குறைவாக இருந்தால் பலம் குறைவாக உள்ளது என்று அர்த்தம் கொள்ளவேண்டும் .

Wednesday, July 16, 2008

அரசியலில் ஈடுபட்டு பெரும் வெற்றிகள் அடைய

அரசியலில் ஈடுபட்டு பெரும் வெற்றிகள் அடைய வேண்டுமென்றால் பின்வரும் அமைப்புகள் இருப்பது நல்லது.

  • சூரியன் மற்றும் செவ்வாய் கிரகங்கள் கண்டிப்பாக பலம் பெற்று இருக்கவேண்டும்.
  • பரிவர்த்தனை யோகம் அல்லது குரு சந்திர யோகம் அல்லது கஜகேசரி யோகம் அல்லது தர்ம கர்மாதிபதி யோகம் அல்லது பஞ்ச மகா புருஷ யோகம் அல்லது நரேந்திர ராஜ யோகம் போன்ற யோகங்களில் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட யோகங்களை பெற்று விளங்க வேண்டும்.
  • செவ்வாய் உச்சம் பெற்றோ அல்லது 3,6,11 போன்ற இடங்களிலோ இருக்க வேண்டும்.
  • 1,5,10 போன்ற இடங்கள் பலம் பெற்று இருந்தாலும் அரசியல் யோகங்கள் உண்டு.
  • மூன்றாம் இடமாகிய தைரிய மற்றும் பராக்கிரம இடம் வலுத்து காணப்பட வேண்டும்.
  • 6 மிடத்தில் சனி ,ராகு ,செவ்வாய் போன்ற கிரகங்கள் வலுத்து காணப்பட்டால் எதிரிகள் வெல்ல முடியாத நிலை உண்டாகும்.

Tuesday, July 15, 2008

பரல்கள்.....

பரல்கள் என்றால் நம் ஜாதகத்தின் கட்டத்தில் அமைத்து உள்ள ஒவ்வொரு கிரகத்தின் தனிப்பட்ட வலிமையும் மற்றும் ஜாதகத்தின் 1 ஆம் வீடு முதல் 12 ஆம் வீடு வரை ஒவ்வொரு வீடும் பெற்றுள்ள வலிமை பார்க்கும் ஒரு முறை தன் பரல்கள் .இதை அஷ்டவர்க்க அட்டவனையை பார்த்து தெரிந்து கொள்ளலாம் .

Monday, July 14, 2008

புத்திரர்கள் உண்டாகுதலும் குரு கிரகமும்

குரு கிரகம் ஐந்தாம் இடமாகிய புத்திர ஸ்தானத்தில் இருந்தால் புத்திரர்கள் உண்டாக தடைகளை உண்டு பண்ணும் .ஆனால் மீனா லக்கினத்திற்கு மட்டும் ஐந்தாம் இடத்தில் குரு உச்சமாக இருந்தால் இந்த தடை வெகு காலத்திற்கு நீடிக்காது. ஆனாலும் ஆண் பிள்ளைகள் உண்டாவதிர்க்கு பதிலாக பெண் பிள்ளைகளே அதிகம் உண்டாக்கும்.

புத்திரஸ்தானம்

ஒரு ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 5 வது இடத்தை புத்திரஸ்தானம் என்று கூறுவர் . பொதுவாக இந்த இடத்தில் எந்த கிரகம் இருந்தாலும் அவரவர் ஜெனன ஜாதகத்தின் கிரக நிலைகள் பொறுத்து , அதன் திசை அல்லது புத்தி வரும் கால நேரம் பொறுத்து தோஷத்தை ஏற்படுத்தும் .இந்த 5 ஆம் இடத்தில் சூரியன் இருந்தால் தந்தைக்கு தோஷத்தையும் , சந்திரன் இருந்தால் தாய்க்கு தோஷத்தையும் , சனி இருந்தால் தனது குழந்தைகளுக்கும் , புதனிருந்தால் தாய் வர்கத்தினருக்கும் , குருவிருந்தால் தந்தை வர்கத்தினருக்கும் , ராகு இருந்தால் பிள்ளைகளுக்கும் , செவ்வாய் இருந்தால் தாய்மாமனுக்கும் தோஷம் உண்டாகும் .

Friday, July 11, 2008

ராகு மற்றும் கேது திசை பலன்கள்

ராகு திசை : மீனம் மற்றும் கடகம் இந்த லக்கினங்களில் பிறந்தவர்களுக்கு ராகு மகா திசை வந்தால் நல்ல பாக்கியங்களை தருவார் .பொன் பொருள் சேர்த்தல் மற்றும் சுப காரியங்கள் நடத்தல் போன்ற நற்பலன்களை அளிப்பார்.

கேது திசை : மகரம் மற்றும் கன்னி இந்த லக்கினங்களில் பிறந்தவர்களுக்கு கேது மகா திசை வந்தால் மிகுந்த செல்வம் மற்றும் ராஜ சன்மானங்கள் பெற்று வாழும் சிறப்பான அமைப்பை தருவார்.

Wednesday, July 9, 2008

ஆயுள் ஸ்தானம் மற்றும் மாரகம்

ஒரு ஜாதகத்தில் 8 ஆம் இடத்தை கொண்டு ஆயுளை பற்றியும் 2 , 7 ஆம் இடத்தை கொண்டு மாரகத்தை பற்றியும் கூறமுடியும் .மாரக தசை அல்லது புத்தி வரும் காலங்களில் மிக கவனமுடன் இருப்பது அவசியம் .

Tuesday, July 8, 2008

நரேந்திர ராஜயோகம் .....

ஒரு ஜாதகத்தில் லக்னத்திலிருந்து அல்லது ராசியிலிருந்து 1 , 5 , 9 ,10 குரு , சுக்கிரன் , தனித்து நின்ற புதன் , இவர்கள் இருந்தால் நரேந்திர ராஜயோகமாகும். இந்த யோகம் அமைந்தவருக்கு வாழ்வில் நல்ல பல நன்மைகள் கிடைக்கும் .

Monday, July 7, 2008

சுபக்கிரகம் ...

குரு , சுக்கிரன் , வளர்பிறை சந்திரன் , நல்ல சேர்க்கையுடன் கூடிய புதன் இவர்கள் சுபக்கிரகங்கள் ஆவார் . சூரியன் , செவ்வாய் , சனி , ராகு , கேது , தேய்பிறை சந்திரன் கெட்ட சேர்க்கையுடன் கூடிய புதன் இவர்கள் பாபகிரகங்கள். இது பொதுவான விதி. ஆனால் எந்த ஒரு பாபகிரகம் ஒரு குறிபிட்ட லக்னத்திற்கு ஆதிபத்தியம் மூலம் 5 மற்றும் 9 வீடுகளுக்கு அதிபதியானால் அவர்கள் சுபக்கிரகங்கள் போல் நன்மை செய்கின்றன.

Sunday, July 6, 2008

வணக்கம் வாசகர்களே...

வணக்கம் வாசகர்களே

கடந்த ஐந்து நாட்களாக தவிர்க்க முடியாத வெளியூர் பயணம் சென்றுவிட்ட காரணத்தினால் இந்த வலைப்பூவில் புதிய குறிப்புகளை என்னால் எழுத முடியவில்லை.மன்னிக்கவும்.இன்று முதல் மறுபடியும் எழுதத் திட்டமிட்டுள்ளேன்.நீங்கள் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கு மிக்க நன்றி.

அன்புடன்,
விஜயபானு ரகுபதி.

Monday, June 30, 2008

சேமிப்பு யாருக்கு? பற்றாகுறை யாருக்கு ?

ஒரு ஜாதகத்தில் 12 ஆம் வீட்டை விட 11 ஆம் வீடு பலம் உடையதாக இருந்தால் செலவை விட சேமிப்பு அதிகமாக இருக்கும். அஷ்டவர்க்கம் கணிதப்படி12 ஆம் வீட்டை விட 11 ஆம் வீட்டில் பரல்கள் அதிகம் இருந்தால் மட்டுமே ஒருவரால் பணம் சேமிக்க இயலும் .இதற்க்கு மாறாக 12 ஆம் வீடு அதிக பரல்கள் பெற்று விட்டால் செலவுகளே அதிகப்படும்.

Friday, June 27, 2008

எப்படிப்பட்ட கணவர் அமைவார்

ஒரு பெண்ணுடைய ஜாதகத்தில் 7 மிடத்தில் சுக்ரன் இருந்தாலோ அல்லது சம்பந்தம் பெற்று இருந்தாலோ அழகும் , அதிர்ஷ்டமும் உடைய கணவர் அமைவார்.

செவ்வாய் இருந்தாலோ அல்லது சம்பந்தம் பெற்று இருந்தாலோ
முன்கோபம் கொண்ட கணவராகவும் மற்றும் தைர்யம் மிகுந்தவராகவும் இருப்பார்.

புதன் இருந்தாலோ அல்லது சம்பந்தம் பெற்று இருந்தாலோ
படித்த மற்றும் புத்திசாலித்தனம் மிகுந்த கணவராக இருப்பார்.

குரு இருந்தாலோ அல்லது சம்பந்தம் பெற்று இருந்தாலோ
நல்ல பண்புகள் உடைய மற்றும் நீதி நெறிப்படி செயல்படுவராகவும் இருப்பார்.

சனி இருந்தாலோ அல்லது சம்பந்தம் பெற்று இருந்தாலோ
வயது அதிகம் உடையவராகவும் மற்றும் கோபம் அதிகம் உடையவராகவும் இருப்பார்.

Thursday, June 26, 2008

லக்னாதிபதி மற்றும் சூரியன் ....

ஒருவருடைய ஜாதகத்தில் லக்னாதிபதி என்று சொல்ல கூடிய ஒன்றாம் வீட்டின் அதிபதியும் ஆத்மக்காரன் என்று சொல்லக்கூடிய சூரியனும் நன்கு அமைய வேண்டும்.அதாவது ஆட்சி , உச்சம் , கேந்திர மற்றும் திரிகோண ஸ்தானங்களில் அமர வேண்டும் . மறைவு ஸ்தானங்களில் அமரக்கூடாது .அவ்வாறு நன்கு அமைந்து இருப்பின் ஜாதகர் எத்தகைய துன்பங்களையும் , கஷ்ட நஷ்டங்களையும் கடந்து வெற்றி கொள்வார் .

Wednesday, June 25, 2008

வாகன யோகம்

ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் மற்றும் நான்காம் வீட்டை கொண்டு வாகன யோகம் இருக்கிறதா என்று சொல்ல முடியும்.நான்காம் வீடு பலம் பொருந்தி இருக்கவேண்டும் .அதாவது ஆட்சி உச்சம் கேந்திர ( 1 , 4 , 7 , 10 ) அல்லது திரிகோணம் ( 5 , 7 , 9 ) இருக்கவேண்டும் .இந்த பலத்தை வைத்து தான் அவர் விலை உயர்ந்த வாகனத்தில் செல்வாரா என்று சொல்ல முடியும்.

Tuesday, June 24, 2008

அர்த்தாஷ்டம சனி ...

ஒருவரது ஜென்ம ராசியில் இருந்து கோட்சார ரீதியாக 4 ஆம் இடத்தில் சனி பகவான் வரும் காலத்தை அர்த்தாஷ்டம சனி என்கிறோம்.ஜென்ம ராசிக்கு நான்காம் வீட்டில் சஞ்சரிக்கும் காலத்தில் குடும்பத்தில் பல்வேறு சிக்கல்களை அடைவார் .உறவினர் மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்படும் .தொழில் அல்லது வியாபார துறையில் இழுபறி நிலை நீடிக்கும் .ஜாதகர் சுகக்கேட்டை அடைவார். குடும்ப சுமைகள் கூடும் . சுருக்கமாக கூறுவதென்றால் அஷ்டம சனி நடப்பதை போன்று தோன்றும் . ரிஷப ராசிக்காரர்களுக்கு தற்பொழுது அர்த்தாஷ்டம சனி நடப்பில் உள்ளது .

Monday, June 23, 2008

அஷ்டமத்து சனி ...........

ஒருவரது ஜென்ம ராசிக்கு கோட்சார ரீதியாக 8 ஆம் வீட்டில் சனி வரும் காலமே அஷ்டமத்து சனி எனப்படும் .இக்காலத்தில் ஒருவர் பல்வேறு தடங்கல்களையும் இடையுறுகளையும் சந்திக்க கூடும் .முயற்சிகள் எளிதில் வெற்றி அளிக்காது .உடல் நலம் பாதிப்படையும் . பொருள் இழப்புகள் ஏற்படும் . கெட்ட தசா புக்திகள் நடப்பில் இருந்தால் கஷ்ட நஷ்டங்கள் ஏற்படும் .

தற்பொழுது மகர ராசிக்காரர்களுக்கு அஷ்டமத்து சனி நடப்பில் உள்ளது.

Sunday, June 22, 2008

யாருக்கு ஏழரை சனி

கன்னி ராசிக்கு 12 இல் விரைய சனியும் , சிம்ம ராசிக்கு ஜென்ம சனியாகவும் , கடக ராசிக்கு 2 இல் குடும்ப சனியாக உலவிகொண்டிருகிறது .

Saturday, June 21, 2008

ஏழரை சனி

நமது ராசியில் இருந்து 12 , 1 , 2 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் காலத்தை தான் ஏழரை சனி என்கிறோம் . இந்த ஏழரை ஆண்டுகள் எல்லோருமே சிற்சில சங்கடங்களை அடைவதை கண்கூடாகக் காண்கின்றோம் . உண்மையில் ஏழரை சனி நடை பெரும் காலத்தில் ஒருவரது வாழ்கைப் பாதையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழும் .

ஒருவரது ஜென்ம ராசிக்கு 12 சஞ்சரிக்கும் 2 1/2 ஆண்டு காலமும் துன்பங்கள் தொடர்வதை போன்ற உணர்வு ஏற்பட்டுவிடும் .பொருள் விரயமாவது , தொழில் வழியில் முடக்கம் , அல்லது புதிய தொழில் முதலீடு செய்ய வேண்டிய கட்டாயம் . போட்ட முதலுக்கேற்ப வருமானம் இருக்காது . இட மாற்றங்கள் , குடும்ப உறுபினர்களை பிரித்து வாழ்வது . வீடு கட்டுதல் , திருமணம் போன்ற சுபகாரியம் செய்தல் .பெரும்பாலும் வீண் அலைச்சல் , கஷ்ட நஷ்டம் , உடல் உழைப்பு மிகுந்து காணப்படும்.

ஒருவரது ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் 2 1/2 ஆண்டுகள் வீண் வம்பு - வழக்கு விவகாரம் தோன்றும் .சிறு விபத்துகள் நேரும் . எக்காரியமும் நினைத்தபடி நடக்காது. முக பொலிவு குறைந்து காணப்படும் . செய்தொழில் முடக்கம் ஏற்படும் . எதிலும் எப்போதும் ஏதேனும் கவலை இருந்து வரும் . மன உளைச்சல் ஏற்படும் .

ஒருவரது ஜென்ம ராசிக்கு 2 சஞ்சரிக்கும் 2 1/2 ஆண்டு காலம் குடும்ப கவலை அடைவர் . பணம் கிடைத்தாலும் தங்காது . எவ்வளவு வரவு ஏற்பட்டாலும் செலவுகள் ஏற்பட்டு கரைந்துவிடும் . வீண் பயம் குடிகொள்ளும் . முன்னுக்குப் பின் முரணாக பேசுவர் , கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும்.